ETV Bharat / international

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்: பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்!

author img

By

Published : Jun 12, 2021, 9:54 AM IST

Updated : Jun 12, 2021, 12:33 PM IST

தொற்று நோயின் காரணமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக ஒன்பது மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் இடர் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும், யுனிசெஃப்பும் எச்சரித்துள்ளன.

Child Labour
தொழிலாளர் எதிர்ப்பு தினம்

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில், யுனிசெஃப், சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8.4 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். இதை ஆராய்ந்து பார்க்கையில், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பல குடும்பங்களில் குழந்தைகளை வேலை செய்திட அனுப்ப நேர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

Child Labour
பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்கள்

இதனைக் கருத்தில்கொண்டு, இந்தாண்டின் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான நாளின் கருப்பொருளாக "இப்போது செயல்படுங்கள்: குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்" என்பதை நிர்ணயித்துள்ளனர்.

280 விழுக்காடு அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட்-19-க்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 280 விழுக்காடு அதிகரித்துள்ளனர். கரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பள்ளிகள் மூடல் காரணமாக வேலை செய்யும் குழந்தைகளின் விகிதம் 28.2 விழுக்காட்டிலிருந்து 79.6 ஆக அதிகரித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Child Labour
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

9 மில்லியன் கூடுதல் குழந்தைத் தொழிலாளர்கள்

மேலும், தொற்றுநோயின் விளைவாக 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகளவில், கூடுதலாக ஒன்பது மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாகத் தள்ளப்படும் இடர் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாலும், பொருளாதார நெருக்கடியினாலும் குழந்தைகள் வேலைக்குத் தள்ளப்படுகின்றனர். அச்சமயத்தில், அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இக்கட்டான காலகட்டத்தில் பாதிக்கப்படவுள்ள குழந்தைகளைக் காக்க வேண்டியது நமது கடமையாகும். பல வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பை முற்றிலும் ஒழித்துக் காட்டுவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Child Labour
9 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் அபாயம்

1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் ஏதேனும் பகுதிகளில் பணிபுரிவதைக் கண்டறிந்தால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டை காக்கும் நிகிதா!

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில், யுனிசெஃப், சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "உலகளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 8.4 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். இதை ஆராய்ந்து பார்க்கையில், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பல குடும்பங்களில் குழந்தைகளை வேலை செய்திட அனுப்ப நேர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

Child Labour
பிஞ்சுகளைக் கிள்ளி எறியாதீர்கள்

இதனைக் கருத்தில்கொண்டு, இந்தாண்டின் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான நாளின் கருப்பொருளாக "இப்போது செயல்படுங்கள்: குழந்தைத் தொழிலாளர்களை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்" என்பதை நிர்ணயித்துள்ளனர்.

280 விழுக்காடு அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்

குழந்தை தொழிலாளர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட்-19-க்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 280 விழுக்காடு அதிகரித்துள்ளனர். கரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பள்ளிகள் மூடல் காரணமாக வேலை செய்யும் குழந்தைகளின் விகிதம் 28.2 விழுக்காட்டிலிருந்து 79.6 ஆக அதிகரித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Child Labour
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

9 மில்லியன் கூடுதல் குழந்தைத் தொழிலாளர்கள்

மேலும், தொற்றுநோயின் விளைவாக 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகளவில், கூடுதலாக ஒன்பது மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாகத் தள்ளப்படும் இடர் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாலும், பொருளாதார நெருக்கடியினாலும் குழந்தைகள் வேலைக்குத் தள்ளப்படுகின்றனர். அச்சமயத்தில், அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இக்கட்டான காலகட்டத்தில் பாதிக்கப்படவுள்ள குழந்தைகளைக் காக்க வேண்டியது நமது கடமையாகும். பல வகைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பை முற்றிலும் ஒழித்துக் காட்டுவோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Child Labour
9 மில்லியன் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் அபாயம்

1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்

தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் ஏதேனும் பகுதிகளில் பணிபுரிவதைக் கண்டறிந்தால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாட்டை காக்கும் நிகிதா!

Last Updated : Jun 12, 2021, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.