ETV Bharat / international

தென்கிழக்காசிய பிராந்தியத்தில் சுகாதார கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் - தென்கிழக்காசிய பிராந்திய நாடுகள்

தென்கிழக்காசிய பிராந்தியத்தின் சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO
WHO
author img

By

Published : Sep 9, 2021, 10:45 PM IST

உலக சுகாதார அமைப்பின் 74ஆவது பிராந்திய கூட்டம் நடைபெற்றது. இதில் தென் கிழக்காசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூணம் கேத்ரபால் சிங் பேசியுள்ளார். அதில், பிரந்திய சுகாதார உள்கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுதும் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்கு ஆளானது. எனவே எதிர்கால சவால்களை சந்திக்க இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டதில் பேசிய இயக்குனர் பூணம், கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை சந்தித்திராத சவால்களை ஏற்படுத்தியது. எந்தவொரு உலக நாடும் இதுபோன்ற பெரும் சவாலை எதிர்கொள்ள இயலவில்லை.

எனவே, இந்த பிரச்னையில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்.

எப்படி 2004ஆம் ஆண்டு சுனாமி இயற்கை பேரிடரை எதிர்கொள்ள பாடம் கற்றுக்கொடுத்ததோ, அதுபோல இந்த பெருந்தொற்று சுகாதார பாதுகாப்பு குறித்து முக்கிய அனுபவ பாடத்தை தந்துள்ளது.

எனவே, வரும் ஆண்டுகளில் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகள் சுகாதார கட்டமைப்பு வலுபடுத்த வேண்டும். அதற்கான பணிகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.

இதையும் படிங்க: காபூல் விமான நிலையத்தில் மீண்டும் சேவை தொடக்கம்

உலக சுகாதார அமைப்பின் 74ஆவது பிராந்திய கூட்டம் நடைபெற்றது. இதில் தென் கிழக்காசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூணம் கேத்ரபால் சிங் பேசியுள்ளார். அதில், பிரந்திய சுகாதார உள்கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கோவிட்-19 தாக்கத்தால் உலகம் முழுதும் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்கு ஆளானது. எனவே எதிர்கால சவால்களை சந்திக்க இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டதில் பேசிய இயக்குனர் பூணம், கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை சந்தித்திராத சவால்களை ஏற்படுத்தியது. எந்தவொரு உலக நாடும் இதுபோன்ற பெரும் சவாலை எதிர்கொள்ள இயலவில்லை.

எனவே, இந்த பிரச்னையில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்.

எப்படி 2004ஆம் ஆண்டு சுனாமி இயற்கை பேரிடரை எதிர்கொள்ள பாடம் கற்றுக்கொடுத்ததோ, அதுபோல இந்த பெருந்தொற்று சுகாதார பாதுகாப்பு குறித்து முக்கிய அனுபவ பாடத்தை தந்துள்ளது.

எனவே, வரும் ஆண்டுகளில் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகள் சுகாதார கட்டமைப்பு வலுபடுத்த வேண்டும். அதற்கான பணிகளை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் என்றார்.

இதையும் படிங்க: காபூல் விமான நிலையத்தில் மீண்டும் சேவை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.