ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஒலிம்பிக் போட்டியில் 2008, 2012, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 100 மீ, 200 மீ ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கங்களை வென்றவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப்பின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 22ஆம் தேதி சனிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை அவர் தனது ட்விட்டரில் காணொலி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
-
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
இதையும் படிங்க: 'நோ தக்ஸ்' - இந்தியாவின் உசைன் போல்ட்