ETV Bharat / international

மத்திய கிழக்கில் அமெரிக்க படை - உலக அமைதிக்கு அச்சுறுத்தல்!

இஸ்லாமாபாத்: "அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கு பகுதியில் குவித்திருப்பது உலக அமைதியை அச்சுறுத்தும்" என்று, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author img

By

Published : May 25, 2019, 8:08 PM IST

முகமது ஜவாத் ஜரிஃப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பதவியேற்றதையடுத்து, ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, பிற நாடுகளின் ஆதரவுடன் ஒப்பந்தத்தில் ஈரான் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனினும், விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், சில வாரங்களாக ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், ஏவுகணை தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600 அமெரிக்க படைகள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் 900 படைகள் விரைவில் அங்கு அனுப்பப்படும் என்றும் அமெரிக்க ராணுவத்தின் தலையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகை தந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரிஃப் ஐ.ஆர்.என்.ஏ எனும் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஈரான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருவது, அவர்களின் ஆக்கிரமிப்பு கொள்கையை நியாயப்படுத்தவே" என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக அமைதியை அச்சுறுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு பதவியேற்றதையடுத்து, ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனையடுத்து, பிற நாடுகளின் ஆதரவுடன் ஒப்பந்தத்தில் ஈரான் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனினும், விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று ஈரான் அறிவித்தது.

இந்நிலையில், சில வாரங்களாக ஈரான், அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில், ஏவுகணை தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை முறியடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 600 அமெரிக்க படைகள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் 900 படைகள் விரைவில் அங்கு அனுப்பப்படும் என்றும் அமெரிக்க ராணுவத்தின் தலையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகை தந்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரிஃப் ஐ.ஆர்.என்.ஏ எனும் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஈரான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருவது, அவர்களின் ஆக்கிரமிப்பு கொள்கையை நியாயப்படுத்தவே" என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக அமைதியை அச்சுறுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.