ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் காலனி ஆதிக்கவாத சிலைகள் சூறையாடல்!

author img

By

Published : Jun 15, 2020, 11:47 AM IST

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நிறவெறிக்கு எதிரான போராட்டக்காரர்கள் காலனி ஆதிக்கவாதியான ஜேம்ஸ் கூக்கின் சிலைகளைச் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

colonial era statues defaced
colonial era statues defaced

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் படுகொலைசெய்யப்பட்டதற்கு நீதி கோரிய அமெரிக்காவில் தொடங்கிய நிறவெறிக்கு எதிரான போராட்டம், தற்போது பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல உலக நாடுகளில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

இந்தப் போராட்டத்தின்போது, அடிமைத் தொழில் செய்துவந்தவர்கள், இனப் படுகொலையில் தொடர்புடையவர்கள், காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் சூறையாடப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் சிட்னி நகரின் ஹைட் பூங்காவில் உள்ள ஜேம்ஸ் கூக் சிலைக்குப் படையெடுத்த போராட்டக்காரர்கள் அதன் மீது, "இனப்படுகொலை செய்வது ஒன்றும் பெருமையல்ல" என்ற வாசகத்தை எழுதியுள்ளனர்.

இதற்கிடையே, சிட்னியின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான ரான்ட்விக்கில் அமைந்துள்ள ஜேம்ஸ் கூக்கின் இன்னொரு சிலையும் சூறையாடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் கூக் இங்கிலாந்தைச் சேர்ந்தவராவார். இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் காலனி அமைப்பதற்குப் பெரும் பங்காற்றிய இவர் சர்ச்சைக்குரிய நபராக வரலாற்று இடம் பிடித்துள்ளார்.

ஹைட் பூங்காவில் நடந்த சூறையாடலுக்கு இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது சம்பவத்துக்கு காரணமானவர்களைக் கண்டறிய அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பூர்வக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகளை நீக்குமாறு ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாகக் குரல் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலை துண்டிப்பு!

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் படுகொலைசெய்யப்பட்டதற்கு நீதி கோரிய அமெரிக்காவில் தொடங்கிய நிறவெறிக்கு எதிரான போராட்டம், தற்போது பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல உலக நாடுகளில் காட்டுத்தீ போல் பரவிவருகிறது.

இந்தப் போராட்டத்தின்போது, அடிமைத் தொழில் செய்துவந்தவர்கள், இனப் படுகொலையில் தொடர்புடையவர்கள், காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகள் சூறையாடப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் சிட்னி நகரின் ஹைட் பூங்காவில் உள்ள ஜேம்ஸ் கூக் சிலைக்குப் படையெடுத்த போராட்டக்காரர்கள் அதன் மீது, "இனப்படுகொலை செய்வது ஒன்றும் பெருமையல்ல" என்ற வாசகத்தை எழுதியுள்ளனர்.

இதற்கிடையே, சிட்னியின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றான ரான்ட்விக்கில் அமைந்துள்ள ஜேம்ஸ் கூக்கின் இன்னொரு சிலையும் சூறையாடப்பட்டது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜேம்ஸ் கூக் இங்கிலாந்தைச் சேர்ந்தவராவார். இங்கிலாந்து ஆஸ்திரேலியாவில் காலனி அமைப்பதற்குப் பெரும் பங்காற்றிய இவர் சர்ச்சைக்குரிய நபராக வரலாற்று இடம் பிடித்துள்ளார்.

ஹைட் பூங்காவில் நடந்த சூறையாடலுக்கு இரண்டு பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது சம்பவத்துக்கு காரணமானவர்களைக் கண்டறிய அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பூர்வக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து காலனி ஆதிக்கவாதிகளின் சிலைகளை நீக்குமாறு ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாகக் குரல் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலை துண்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.