ETV Bharat / international

ஈஸ்டர் தாக்குதல்: வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த குழு அமைப்பு - ஈஸ்டர் தாக்குதல் 2019

கொழும்பு: ஈஸ்டர் தேவாலய தாக்குதல் தொடர்பான விசாரணையை விரைவுப்படுத்த அரசு ஆறு பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.

SL easter attack  SL easter attack probe  Sri Lanka easter attack probe  major general Jagath Alwis  Archbishop of Colombo cardinal Malcolm Ranjith  Sri Lanka sets task force for Easter attack investigation  ஈஸ்டர் தாக்குதல்: வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த குழு அமைப்பு  ஈஸ்டர் தாக்குதல்: வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த குழு அமைப்பு  ஈஸ்டர் தாக்குதல் 2019  ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை
SL easter attack SL easter attack probe Sri Lanka easter attack probe major general Jagath Alwis Archbishop of Colombo cardinal Malcolm Ranjith Sri Lanka sets task force for Easter attack investigation ஈஸ்டர் தாக்குதல்: வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த குழு அமைப்பு ஈஸ்டர் தாக்குதல்: வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த குழு அமைப்பு ஈஸ்டர் தாக்குதல் 2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு விசாரணை
author img

By

Published : Feb 24, 2020, 11:45 PM IST

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையிலுள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணையை துரிதப்படுத்த அரசு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை மேஜர் ஜெனரல் குணரத்ன அளித்துள்ள அறிக்கையில், “கொழும்பு, நெகம்போ, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் குறித்து விரைவான விசாரணையை உறுதிசெய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உத்தரவைத் தொடர்ந்து பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்த சிஐடி விசாரணை கடந்த ஆட்சியின்போது திறம்பட நடத்தப்படவில்லை. முறையான விசாரணையை நடத்தத் தவறினால், இறந்த அந்த அப்பாவி மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. தற்போது விசாரணை துரிதப்படுத்தப்படும்.

பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அரசு அமைத்துள்ள குழுவில் நான்கு பேர் உள்ளனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து: மகிந்த ராஜபக்ச மகன் மன்னிப்பு

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையிலுள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொன்றுகுவிக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றிருந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விசாரணையை துரிதப்படுத்த அரசு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை மேஜர் ஜெனரல் குணரத்ன அளித்துள்ள அறிக்கையில், “கொழும்பு, நெகம்போ, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்கள் குறித்து விரைவான விசாரணையை உறுதிசெய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உத்தரவைத் தொடர்ந்து பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் குறித்த சிஐடி விசாரணை கடந்த ஆட்சியின்போது திறம்பட நடத்தப்படவில்லை. முறையான விசாரணையை நடத்தத் தவறினால், இறந்த அந்த அப்பாவி மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. தற்போது விசாரணை துரிதப்படுத்தப்படும்.

பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். அரசு அமைத்துள்ள குழுவில் நான்கு பேர் உள்ளனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து: மகிந்த ராஜபக்ச மகன் மன்னிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.