ETV Bharat / international

'ஷாகிப் அல் ஹாசன் உயிருக்கு அச்சுறுத்தல்'- துண்டு துண்டாக வெட்டுவேன் என இளைஞர் பகிரங்க மிரட்டல்!

author img

By

Published : Nov 17, 2020, 10:04 AM IST

வங்க தேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹாசன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நேரலையில் தோன்றும் அடிப்படைவாத இளைஞர் ஒருவர், ஷாகிப் அல் ஹாசனை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று பகிரங்கமாக மிரட்டும் காணொலி காட்சி வெளியாகியுள்ளது.

Shakib Al Hasan Kali Puja Death threat Kolkata ஷாகிப் அல் ஹாசன் உயிருக்கு அச்சுறுத்தல் ஷாகிப் அல் ஹாசன் காளி பூஜை மிரட்டல் ஃபேஸ்புக்
Shakib Al Hasan Kali Puja Death threat Kolkata ஷாகிப் அல் ஹாசன் உயிருக்கு அச்சுறுத்தல் ஷாகிப் அல் ஹாசன் காளி பூஜை மிரட்டல் ஃபேஸ்புக்

டாக்கா: வங்க தேச கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக வலம்வருபவர் ஷாகிப் அல் ஹாசன். இவரை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12.06 மணிக்கு ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நேரலையில் தோன்றிய அடிப்படைவாத இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேச்சின் போது, ஷாகிப் அல் ஹாசன் கொல்கத்தாவில் காளி ஊர்வலத்தை தொடங்கிவைத்துள்ளார். ஷாகிப் அல் ஹாசனின் செயலால், இஸ்லாமியர்கள் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவரை நான் துண்டு துண்டாக வெட்டவும் தயங்க மாட்டேன். இதற்காக சில்ஹெட் (மிரட்டல் விடுக்கும் இளைஞர் வசிக்கும் பகுதி) நகரிலிருந்து டாக்காவுக்கு வரவும் தயங்க மாட்டேன்” எனக் மிரட்டியிருந்தார்.

இது தொடர்பாக சில்ஹெட் மெட்ரோ கூடுதல் காவல் ஆணையர் அஷ்ரப் உல்லா தஹிர் கூறுகையில், “இந்த விஷயம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வீடியோ லிங்கை இணைய குற்றப்பிரிவு காவலர்களுக்கு அனுப்பியுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் மீண்டும் ஃபேஸ்புக் நேரலையில் தோன்றிய சம்மந்தப்பட்ட அடிப்படைவாத இளைஞர், “தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் அனைவரும், குறிப்பாக பிரபலங்கள் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

இந்த இரண்டு காணொலிகளும் தற்போது நீக்கப்பட்டுவிட்டன. ஷாகிப் அல் ஹாசன் கொல்கத்தா பெலேஹட்டா நகரில் நடந்த காளி பூஜையினை தொடங்கிவைத்தார்.

மேலும் அவர் துர்கா தேவி சிலையின் முன்னாள் நின்று பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஷாகிப் அல் ஹாசன் வெள்ளிக்கிழமை (நவ.13) வங்கதேசம் திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு அடிப்படைவாத இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 2 ஆண்டு தடை ஓவர்... கம்பேக் கொடுக்கவுள்ள ஷாகிப் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

டாக்கா: வங்க தேச கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக வலம்வருபவர் ஷாகிப் அல் ஹாசன். இவரை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12.06 மணிக்கு ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் நேரலையில் தோன்றிய அடிப்படைவாத இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது பேச்சின் போது, ஷாகிப் அல் ஹாசன் கொல்கத்தாவில் காளி ஊர்வலத்தை தொடங்கிவைத்துள்ளார். ஷாகிப் அல் ஹாசனின் செயலால், இஸ்லாமியர்கள் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவரை நான் துண்டு துண்டாக வெட்டவும் தயங்க மாட்டேன். இதற்காக சில்ஹெட் (மிரட்டல் விடுக்கும் இளைஞர் வசிக்கும் பகுதி) நகரிலிருந்து டாக்காவுக்கு வரவும் தயங்க மாட்டேன்” எனக் மிரட்டியிருந்தார்.

இது தொடர்பாக சில்ஹெட் மெட்ரோ கூடுதல் காவல் ஆணையர் அஷ்ரப் உல்லா தஹிர் கூறுகையில், “இந்த விஷயம் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வீடியோ லிங்கை இணைய குற்றப்பிரிவு காவலர்களுக்கு அனுப்பியுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்நிலையில் மீண்டும் ஃபேஸ்புக் நேரலையில் தோன்றிய சம்மந்தப்பட்ட அடிப்படைவாத இளைஞர், “தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் அனைவரும், குறிப்பாக பிரபலங்கள் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

இந்த இரண்டு காணொலிகளும் தற்போது நீக்கப்பட்டுவிட்டன. ஷாகிப் அல் ஹாசன் கொல்கத்தா பெலேஹட்டா நகரில் நடந்த காளி பூஜையினை தொடங்கிவைத்தார்.

மேலும் அவர் துர்கா தேவி சிலையின் முன்னாள் நின்று பிரார்த்தனை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஷாகிப் அல் ஹாசன் வெள்ளிக்கிழமை (நவ.13) வங்கதேசம் திரும்பினார்.

இந்நிலையில், அவருக்கு அடிப்படைவாத இளைஞர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 2 ஆண்டு தடை ஓவர்... கம்பேக் கொடுக்கவுள்ள ஷாகிப் - ரசிகர்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.