குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வஜிப் அலி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று (டிச. 22) போராட்டம் நடைபெற்றது. மெர்போர்னில் உள்ள இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு (NRC)க்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் போது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த வஜ்பி அலி, இதை வைத்துக்கொண்டு மோடி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க : காவல் துறை உத்தரவை மீறி திமுக போராட்டம் நடத்தினால் அதனைப் பதிவு செய்ய வேண்டும்: நீதிமன்றம்!