ETV Bharat / international

தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக ஹாங்காங் போராட்டம்

author img

By

Published : Jun 30, 2020, 5:19 PM IST

Updated : Jun 30, 2020, 5:25 PM IST

ஹாங்காங்: பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ஹாங்காங்
ஹாங்காங்

ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. "ஒரு நாடு இரு அமைப்பு" என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன்னாட்சி தரப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஹாங்காங்கை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளைக் ஒடுக்கும் வெளிநாட்டின் தலையீட்டை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இது எதிர்கருத்து தெரிவிப்பவர்களின் குரலை ஒடுக்கும் விதமாக இருக்கும் என மக்கள் அஞ்சினர். இதனை எதிர்த்து, ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஹாங்காங் போராட்டம்

இதன் ஒரு பகுதியாக, ஹாங்காங்கில் உள்ள ஒரு மாலில் போராட்டக்காரர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பினர். தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைக் குழு, தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என செய்திகள் வெளியாகின. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சீனா இன்னும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற முகத்துடன் ஹாங்காங்கை பார்க்கும் சீனா

ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. "ஒரு நாடு இரு அமைப்பு" என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தன்னாட்சி தரப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஹாங்காங்கை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளைக் ஒடுக்கும் வெளிநாட்டின் தலையீட்டை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இது எதிர்கருத்து தெரிவிப்பவர்களின் குரலை ஒடுக்கும் விதமாக இருக்கும் என மக்கள் அஞ்சினர். இதனை எதிர்த்து, ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஹாங்காங் போராட்டம்

இதன் ஒரு பகுதியாக, ஹாங்காங்கில் உள்ள ஒரு மாலில் போராட்டக்காரர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பினர். தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைக் குழு, தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என செய்திகள் வெளியாகின. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை சீனா இன்னும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற முகத்துடன் ஹாங்காங்கை பார்க்கும் சீனா

Last Updated : Jun 30, 2020, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.