ETV Bharat / international

ஒரு மாதத்திற்கு தப்பிய ஒலியின் பிரதமர் பதவி

author img

By

Published : Jul 19, 2020, 11:59 PM IST

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மத்தியில், இமயமலை நாட்டின் அரசியல் முன்னேற்றங்களை கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள், அவர் தற்போது அவசரமாக ராஜினாமா போவதில்லை என்றும் குறைந்தது ஒரு மாதமாவது தனது பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பார்  என்றும் கருதுகின்றனர்.

ஒலி
ஒலி

கடந்த வியாழக்கிழமையன்று, இரண்டு முன்னாள் பிரதமர்கள், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (NCP) இணைத் தலைவரான புஷ்பா கமல் தஹால் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மாதவ் நேபாள் ஆகியோர் காத்மாண்டுவில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஒலியை ராஜினாமா செய்யுமாறு மீண்டும் கேட்டுக் கொண்டனர்.

அரசியல் மற்றும் இராஜதந்திர சர்ச்சைகள் காரணமாக ஒலியை ராஜினாமா செய்யுமாறு தஹாலும் நேபாளும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவர் செயல்படும் விதத்தை பற்றி கேள்வி கேட்பதால் ஒலி கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் ஒலி, அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் அதில் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை அடங்கிய ஒரு புதிய அரசியல் வரைபடத்தை சமர்ப்பித்ததன் காரணமாக நேபாளத்தின் முக்கிய அபிவிருத்தி உதவி கூட்டாளிகளில் ஒருவரான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் ஒரு புதிய நிலையை எட்டியது. கைலாஷ் மானசரோவருக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்காக கட்டப்பட்ட லிபுலேக் வரை ஒரு சாலையை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே மாதம் திறந்து வைத்ததை அடுத்து இது நிகழ்ந்தது.

பிரதிநிதிகள் சபைக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஜூன் 13 அன்று முதல் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், இந்த செயற்கையான விரிவாக்கம் வரலாற்று உண்மை அல்லது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மேலும் அவை நியாயமானவை அல்ல. நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தற்போதைய புரிதலை மீறுவதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்

இருப்பினும், ஒலியை காப்பாற்றும் முயற்சியில், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, இந்த பிரச்சினையை இராஜதந்திர முயற்சிகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறினார். இராஜதந்திர முயற்சிகள் மூலம் சர்ச்சை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நேபாளம்-இந்தியா பல பரிமாண உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இந்த எல்லைப் பிரச்சினை நேபாளத்துடன் இந்தியாவுடனான உறவுகளின் ஒட்டுமொத்த நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்று ஜூன் 29 நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் கியாவாலி கூறினார்.

முந்தைய நாள் காத்மாண்டுவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஒலி, புது தில்லி தன்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாகக் கூறி தனது இந்திய விரோதத் தாக்குதலைத் தொடர்ந்ததையடுத்து இந்த அறிக்கை வெளியானது

தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஒலியின் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது, அது ஜூன் 21 அன்று நாடாளுமன்ற மாநில விவகாரங்கள் மற்றும் நல்லாட்சிக் குழு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

புதிய திருத்தத்தின்படி, நேபாள ஆண்களை மணந்த வெளிநாட்டு பெண்கள் குடியுரிமையைப் பெறுவதற்கு ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும், இதற்கு முன்னர் பெண்களின் திருமணத்திற்குப் பிறகு அத்தகைய அந்தஸ்தை உடனே பெற அனுமதித்த முந்தைய சட்டத்திற்கு எதிரானது. இது இரு நாடுகளிலும் மக்கள் மத்தியில் குறிப்பாக எல்லையின் இந்தியப் பகுதியிலுள்ள குடும்பங்களிடையே பெரும் அதிருப்தியைத் தூண்டியது, ஏனெனில் அவர்களில் பலர் தங்கள் மகள்களை நேபாள ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுதிருந்தனர்.

மறுபடியும், இந்த வார தொடக்கத்தில், ராமர் பிறந்த இடமான உண்மையான அயோத்தி நேபாளத்தின் பார்சா மாவட்டமான தோரியில் இருப்பதாகக் கூறியது, பொதுமக்கள் மற்றும் அவரது சொந்த கட்சித் தலைவர் பாம்தேவ் கவுதம் உட்பட கட்சித் தலைவர்களிடையே கோபத்தைத் தூண்டியது, , அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

பார்வையாளர்கள் கூற்றுப்படி, பிரதமர் ஒலி நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்ட விதத்தினால் தனது சொந்தக் கட்சியினரிடமிருந்து கடும் நெருக்கடிக்கு ஆளான பின்னர் அனைவரின் கவனத்தைத் திசைதிருப்ப இந்த இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர் ஆகிய இரு பதவியிலிருந்தும் ஒலியின் இராஜினாமாவை தஹால் கோரியுள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது. வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு நிலைக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழுவின் 44 உறுப்பினர்களில் 13 பேரின் ஆதரவு மட்டுமே ஒலிக்கு இருக்கிறது.

இதற்கிடையில், ஒலி வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை முடக்க திட்டமிட்டுள்ளார்

இப்போது, ​​பார்வையாளர்கள் ஒலி அவசரமாக தனது பதவிகளை விட்டு விலக வாய்ப்பில்லை என்றும் அவர் குறைந்தது ஒரு மாதமாவது அவர் வரப்போகும் கடினமான சூழ்நிலையில் நீடிக்கக்கூடும் என்றும் நம்புகின்றனர்

காத்மாண்டுவிலிருந்து தொலைபேசியில் ஈடிவி பாரத்-திடம் பேசிய அரசியல் பொருளாதார நிபுணர் ஹரி ரோகா, ஞாயிற்றுக்கிழமை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழு கூட்டம் தீர்க்கமானதாக இருக்காது என்று கூறினார்.

"ஆகஸ்ட் பிற்பகுதியில் அவர்கள், கட்சி மத்திய குழு கூட்டத்தை கூட்ட வாய்ப்புள்ளது, இது ஒலியின் எதிர்காலம் குறித்து தீர்க்கமானதாக இருக்கும்" என்று ரோகா கூறினார்.

ஒலி ஒரு நேர்மையற்றவராக இருக்கும்போது, ​​அவரது நம்பகமான தளபதியான வெளியுறவுத்துறை அமைச்சர் கியாவாலி, சர்ச்சைகள் கிளம்பிய பின் நம்பகத்தன்மையை காப்பாற்ற முயன்று வருகிறார்

சமீபத்திய நிகழ்வு ஒலி அயோத்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டபோது. இதைத் தொடர்ந்து, நேபாள வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, ஒலியின் கருத்துக்கள் "எந்தவொரு அரசியல் விஷயத்துடனும் இணைக்கப்படவில்லை, மேலும் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை". என்று கூறியது

ஸ்ரீராம் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள் பற்றி பல கதைகள் மற்றும் குறிப்புகள் இருந்ததால், ஸ்ரீராம், ராமாயணம் மற்றும் இந்த வளமான நாகரிகத்துடன் இணைக்கப்பட்ட பல்வேறு இடங்களை பற்றிய பரந்த கலாச்சாரத்தின் மேலதிக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வெறுமனே எடுத்துரைத்தார் என்று அது மேலும் கூறியது.

புதிய அரசியல் வரைபடத்தை நேபாள நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிலளித்த போதிலும், ஒலியின் அயோத்தி கருத்துக்கள் குறித்து புது தில்லி மவுனத்தை காத்து வருகிறது

"இந்தியா, ஒரு பெரிய நாடாக, மிகவும் விவேகமான அணுகுமுறையை எடுத்து வருகிறது" என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் மூத்த உறுப்பினர் கே. யோமி, ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்

நாம் இதுபோன்ற அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்றும் நேபாளத்திலிருந்து வரும் ஒவ்வொரு இந்திய எதிர்ப்பு அறிக்கைகளுக்கும் புது தில்லி பதிலளிக்க வேண்டியதில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகம் காத்மாண்டுவில் சனிக்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டக்கூடும் அப்போது ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் மத்திய குழு கூட்டத்தை நடத்த பரிந்துரைக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன கட்சியின் தஹால் பிரிவு இதை விரும்புவதால் ஞாயிற்றுக்கிழமை நிலைக்குழு கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய குழு கூட்டத்திற்குப் பிறகுதான் ஒலி தனது தலைவிதியை அறிந்து கொள்ள முடியும்

நேபாளத்தின் பொருளாதார மற்றும் தொற்றுநோய்கள் தான் இப்படி ஒரு நிலைமைக்கு வர வழிவகுத்தது

"கட்சிக்குள் இருக்கும் சர்ச்சை ஆழமானது, அது பிளவு படும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் யாரும் துணிந்து முடிவெடுக்க விரும்பவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்? என்று தெரிவில்லை ” என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத பார்வையாளர் ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

இதையும் படிங்க: பேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: நண்பர்களுடன் மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுங்கள்!

கடந்த வியாழக்கிழமையன்று, இரண்டு முன்னாள் பிரதமர்கள், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (NCP) இணைத் தலைவரான புஷ்பா கமல் தஹால் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் மாதவ் நேபாள் ஆகியோர் காத்மாண்டுவில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஒலியை ராஜினாமா செய்யுமாறு மீண்டும் கேட்டுக் கொண்டனர்.

அரசியல் மற்றும் இராஜதந்திர சர்ச்சைகள் காரணமாக ஒலியை ராஜினாமா செய்யுமாறு தஹாலும் நேபாளும் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவில் உள்ள பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவர் செயல்படும் விதத்தை பற்றி கேள்வி கேட்பதால் ஒலி கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் ஒலி, அந்த நாட்டின் பாராளுமன்றத்தின் அதில் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை அடங்கிய ஒரு புதிய அரசியல் வரைபடத்தை சமர்ப்பித்ததன் காரணமாக நேபாளத்தின் முக்கிய அபிவிருத்தி உதவி கூட்டாளிகளில் ஒருவரான இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் ஒரு புதிய நிலையை எட்டியது. கைலாஷ் மானசரோவருக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்காக கட்டப்பட்ட லிபுலேக் வரை ஒரு சாலையை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மே மாதம் திறந்து வைத்ததை அடுத்து இது நிகழ்ந்தது.

பிரதிநிதிகள் சபைக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் கீழ் சபை ஜூன் 13 அன்று முதல் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், இந்த செயற்கையான விரிவாக்கம் வரலாற்று உண்மை அல்லது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, மேலும் அவை நியாயமானவை அல்ல. நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் தற்போதைய புரிதலை மீறுவதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறினார்

இருப்பினும், ஒலியை காப்பாற்றும் முயற்சியில், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, இந்த பிரச்சினையை இராஜதந்திர முயற்சிகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறினார். இராஜதந்திர முயற்சிகள் மூலம் சர்ச்சை தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நேபாளம்-இந்தியா பல பரிமாண உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இந்த எல்லைப் பிரச்சினை நேபாளத்துடன் இந்தியாவுடனான உறவுகளின் ஒட்டுமொத்த நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது என்று ஜூன் 29 நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் கியாவாலி கூறினார்.

முந்தைய நாள் காத்மாண்டுவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஒலி, புது தில்லி தன்னை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பதாகக் கூறி தனது இந்திய விரோதத் தாக்குதலைத் தொடர்ந்ததையடுத்து இந்த அறிக்கை வெளியானது

தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் மக்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஒலியின் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது, அது ஜூன் 21 அன்று நாடாளுமன்ற மாநில விவகாரங்கள் மற்றும் நல்லாட்சிக் குழு உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

புதிய திருத்தத்தின்படி, நேபாள ஆண்களை மணந்த வெளிநாட்டு பெண்கள் குடியுரிமையைப் பெறுவதற்கு ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும், இதற்கு முன்னர் பெண்களின் திருமணத்திற்குப் பிறகு அத்தகைய அந்தஸ்தை உடனே பெற அனுமதித்த முந்தைய சட்டத்திற்கு எதிரானது. இது இரு நாடுகளிலும் மக்கள் மத்தியில் குறிப்பாக எல்லையின் இந்தியப் பகுதியிலுள்ள குடும்பங்களிடையே பெரும் அதிருப்தியைத் தூண்டியது, ஏனெனில் அவர்களில் பலர் தங்கள் மகள்களை நேபாள ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுதிருந்தனர்.

மறுபடியும், இந்த வார தொடக்கத்தில், ராமர் பிறந்த இடமான உண்மையான அயோத்தி நேபாளத்தின் பார்சா மாவட்டமான தோரியில் இருப்பதாகக் கூறியது, பொதுமக்கள் மற்றும் அவரது சொந்த கட்சித் தலைவர் பாம்தேவ் கவுதம் உட்பட கட்சித் தலைவர்களிடையே கோபத்தைத் தூண்டியது, , அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.

பார்வையாளர்கள் கூற்றுப்படி, பிரதமர் ஒலி நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கையாண்ட விதத்தினால் தனது சொந்தக் கட்சியினரிடமிருந்து கடும் நெருக்கடிக்கு ஆளான பின்னர் அனைவரின் கவனத்தைத் திசைதிருப்ப இந்த இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவர் ஆகிய இரு பதவியிலிருந்தும் ஒலியின் இராஜினாமாவை தஹால் கோரியுள்ள நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியது. வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு நிலைக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழுவின் 44 உறுப்பினர்களில் 13 பேரின் ஆதரவு மட்டுமே ஒலிக்கு இருக்கிறது.

இதற்கிடையில், ஒலி வாக்கெடுப்பைத் தவிர்ப்பதற்காக, ஜனாதிபதி பிரகடனத்தின் மூலம் பாராளுமன்றத்தை முடக்க திட்டமிட்டுள்ளார்

இப்போது, ​​பார்வையாளர்கள் ஒலி அவசரமாக தனது பதவிகளை விட்டு விலக வாய்ப்பில்லை என்றும் அவர் குறைந்தது ஒரு மாதமாவது அவர் வரப்போகும் கடினமான சூழ்நிலையில் நீடிக்கக்கூடும் என்றும் நம்புகின்றனர்

காத்மாண்டுவிலிருந்து தொலைபேசியில் ஈடிவி பாரத்-திடம் பேசிய அரசியல் பொருளாதார நிபுணர் ஹரி ரோகா, ஞாயிற்றுக்கிழமை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக்குழு கூட்டம் தீர்க்கமானதாக இருக்காது என்று கூறினார்.

"ஆகஸ்ட் பிற்பகுதியில் அவர்கள், கட்சி மத்திய குழு கூட்டத்தை கூட்ட வாய்ப்புள்ளது, இது ஒலியின் எதிர்காலம் குறித்து தீர்க்கமானதாக இருக்கும்" என்று ரோகா கூறினார்.

ஒலி ஒரு நேர்மையற்றவராக இருக்கும்போது, ​​அவரது நம்பகமான தளபதியான வெளியுறவுத்துறை அமைச்சர் கியாவாலி, சர்ச்சைகள் கிளம்பிய பின் நம்பகத்தன்மையை காப்பாற்ற முயன்று வருகிறார்

சமீபத்திய நிகழ்வு ஒலி அயோத்தி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டபோது. இதைத் தொடர்ந்து, நேபாள வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, ஒலியின் கருத்துக்கள் "எந்தவொரு அரசியல் விஷயத்துடனும் இணைக்கப்படவில்லை, மேலும் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை". என்று கூறியது

ஸ்ரீராம் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்கள் பற்றி பல கதைகள் மற்றும் குறிப்புகள் இருந்ததால், ஸ்ரீராம், ராமாயணம் மற்றும் இந்த வளமான நாகரிகத்துடன் இணைக்கப்பட்ட பல்வேறு இடங்களை பற்றிய பரந்த கலாச்சாரத்தின் மேலதிக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வெறுமனே எடுத்துரைத்தார் என்று அது மேலும் கூறியது.

புதிய அரசியல் வரைபடத்தை நேபாள நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிலளித்த போதிலும், ஒலியின் அயோத்தி கருத்துக்கள் குறித்து புது தில்லி மவுனத்தை காத்து வருகிறது

"இந்தியா, ஒரு பெரிய நாடாக, மிகவும் விவேகமான அணுகுமுறையை எடுத்து வருகிறது" என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் மூத்த உறுப்பினர் கே. யோமி, ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்

நாம் இதுபோன்ற அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்றும் நேபாளத்திலிருந்து வரும் ஒவ்வொரு இந்திய எதிர்ப்பு அறிக்கைகளுக்கும் புது தில்லி பதிலளிக்க வேண்டியதில்லை என்றும் மேலும் அவர் கூறினார்.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகம் காத்மாண்டுவில் சனிக்கிழமை ஒரு கூட்டத்தை கூட்டக்கூடும் அப்போது ஆகஸ்ட் பிற்பகுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் மத்திய குழு கூட்டத்தை நடத்த பரிந்துரைக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன கட்சியின் தஹால் பிரிவு இதை விரும்புவதால் ஞாயிற்றுக்கிழமை நிலைக்குழு கூட்டத்தில் இது அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய குழு கூட்டத்திற்குப் பிறகுதான் ஒலி தனது தலைவிதியை அறிந்து கொள்ள முடியும்

நேபாளத்தின் பொருளாதார மற்றும் தொற்றுநோய்கள் தான் இப்படி ஒரு நிலைமைக்கு வர வழிவகுத்தது

"கட்சிக்குள் இருக்கும் சர்ச்சை ஆழமானது, அது பிளவு படும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த நேரத்தில் யாரும் துணிந்து முடிவெடுக்க விரும்பவில்லை. பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்? என்று தெரிவில்லை ” என்று ஒரு பெயர் வெளியிட விரும்பாத பார்வையாளர் ஈடிவி பாரத்-திடம் கூறினார்.

இதையும் படிங்க: பேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: நண்பர்களுடன் மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.