ETV Bharat / international

உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இன்று தேர்தல்!

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் நடைபெறும் பொதுத் தேர்தல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

author img

By

Published : Apr 17, 2019, 9:27 AM IST

வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, உலகின் மிகப்பெரிய மூன்றாவது ஜனநாயக நாடாக திகழ்கிறது. மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என மூன்றும் இன்று ஒரே நாளில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வாக்களிக்க 193 மில்லியன் மக்கள் தகுதிபெற்றுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள எட்டு லட்சம் வாக்கு சாவடியில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மாகாணம் மற்றும் மாவட்ட அளவிலான தேர்தலில் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பேர் களம் காண்கின்றனர்.

இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் நான்கு லட்சத்து 53 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே, தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, உலகின் மிகப்பெரிய மூன்றாவது ஜனநாயக நாடாக திகழ்கிறது. மேலும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில், அதிபர் பதவிக்கான தேர்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என மூன்றும் இன்று ஒரே நாளில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வாக்களிக்க 193 மில்லியன் மக்கள் தகுதிபெற்றுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள எட்டு லட்சம் வாக்கு சாவடியில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மாகாணம் மற்றும் மாவட்ட அளவிலான தேர்தலில் இரண்டு லட்சத்து 45 ஆயிரம் பேர் களம் காண்கின்றனர்.

இதனையொட்டி, பாதுகாப்பு பணியில் நான்கு லட்சத்து 53 ஆயிரம் போலீஸார் ஈடுபட உள்ளனர். இதற்கிடையே, தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.