ETV Bharat / international

‘இந்திய - நேபாள உறவில் உருவாகியுள்ள புதிய சிக்கல்!’ - ஸ்மிதா சர்மா

author img

By

Published : Nov 9, 2019, 8:58 PM IST

காலாபானி பகுதி உரிமை தொடர்பாக இந்திய - நேபாள நாடுகளிடையே புதிய சிக்கல் உருவாகியுள்ளதாகவும், இருநாட்டு வெளியுறவுக் கொள்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு அவர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

Nepal

இந்தியா - நேபாள் நாடுகளுக்கிடையேயான ராஜரீக உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான நகர்வு அண்மையில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், இரு நாடுகளின் எல்லையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்றும் இந்தியா தனது வரைபடத்தில் அதைத் தனது பகுதியாக தவறுதலாக வைத்துள்ளது எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை உடனடியாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, நேபாளம் குறிப்பிட்டுள்ள அப்பகுதி இந்தியாவுடையதே எனத் தெளிவான பதிலை அளித்துள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைக் கொண்ட புதிய வரைபடத்தை இந்தியா வெளியிட்டபின் தான் இத்தகைய குழப்பங்கள் நிலவத் தொடங்கியுள்ளது. இந்திய - நேபாள எல்லைப்பகுதியான காத்மாண்டுவை ஒட்டியுள்ள இந்தியாவின் பகுதிகளான காலாபானி மற்றும் லிபு லேக் தங்களுக்குச் சொந்தமானது என நேப்பாள் நாட்டு வெளியுறவுத் துறை அண்மையில் கூறிவருகிறது. அதைத் தொடர்ந்து காலாபானி நேபாளம் நாட்டைச் சேர்ந்தது எனவும், இதுகுறித்து இரு நாட்டின் செயலாளர்களும் இனைந்து பேசி தீர்வு காண்போம் என வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதை மறுக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வரைபடமானது இந்திய இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆவணம். இதில் விவாதத்திற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. அதேவேளை இருநாடுகளும் இணைந்து நல்லுறவை பேண அனைத்து விதமான நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நேபாளம் கருத்து வெளியிட்டவுடன் அந்நாட்டின் அரசியல் கட்சியினர், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி தரப்பினர் சமூக வலைத்தளங்களில் இதற்கான ஆதரவு கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இந்தியாவுக்கு எதிராக சில பேர் கறுப்புக்கொடி போராட்டங்களை மேற்கொண்டதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த புதிய சிக்கல் குறித்து நேபாள நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான சுஜிவ் சங்கையா வருத்தம் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இதுபோன்று சிக்கல் உருவானபோது இருநாடுகளுக்கிடையே பொருளாதார சுணக்கம் உருவானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். இருநாடுகளும் இந்த விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் சுஜிவ் சுக்லா.

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!

இந்தியா - நேபாள் நாடுகளுக்கிடையேயான ராஜரீக உறவில் விரிசல் ஏற்படும் வகையிலான நகர்வு அண்மையில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், இரு நாடுகளின் எல்லையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்றும் இந்தியா தனது வரைபடத்தில் அதைத் தனது பகுதியாக தவறுதலாக வைத்துள்ளது எனவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை உடனடியாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, நேபாளம் குறிப்பிட்டுள்ள அப்பகுதி இந்தியாவுடையதே எனத் தெளிவான பதிலை அளித்துள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களைக் கொண்ட புதிய வரைபடத்தை இந்தியா வெளியிட்டபின் தான் இத்தகைய குழப்பங்கள் நிலவத் தொடங்கியுள்ளது. இந்திய - நேபாள எல்லைப்பகுதியான காத்மாண்டுவை ஒட்டியுள்ள இந்தியாவின் பகுதிகளான காலாபானி மற்றும் லிபு லேக் தங்களுக்குச் சொந்தமானது என நேப்பாள் நாட்டு வெளியுறவுத் துறை அண்மையில் கூறிவருகிறது. அதைத் தொடர்ந்து காலாபானி நேபாளம் நாட்டைச் சேர்ந்தது எனவும், இதுகுறித்து இரு நாட்டின் செயலாளர்களும் இனைந்து பேசி தீர்வு காண்போம் என வெளியுறவுத் துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதை மறுக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வரைபடமானது இந்திய இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்ட ஆவணம். இதில் விவாதத்திற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை. அதேவேளை இருநாடுகளும் இணைந்து நல்லுறவை பேண அனைத்து விதமான நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்படும் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நேபாளம் கருத்து வெளியிட்டவுடன் அந்நாட்டின் அரசியல் கட்சியினர், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி தரப்பினர் சமூக வலைத்தளங்களில் இதற்கான ஆதரவு கருத்துகளை பதிவிடத் தொடங்கினர். இந்தியாவுக்கு எதிராக சில பேர் கறுப்புக்கொடி போராட்டங்களை மேற்கொண்டதாகவும் சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த புதிய சிக்கல் குறித்து நேபாள நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான சுஜிவ் சங்கையா வருத்தம் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டில் இதுபோன்று சிக்கல் உருவானபோது இருநாடுகளுக்கிடையே பொருளாதார சுணக்கம் உருவானது எனக் கருத்து தெரிவித்துள்ளார். இருநாடுகளும் இந்த விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாள வேண்டுமென கருத்து தெரிவித்துள்ளார் சுஜிவ் சுக்லா.

இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி 2: 'இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை'யான வெள்ளைக்கார துரையின் கதை!

Intro:Body:

IND_Nepal Kalapani Issue 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.