ETV Bharat / international

உலக அளவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!

author img

By

Published : Sep 11, 2020, 2:34 PM IST

உலக அளவில் நேற்று (செப்.10) ஒரே நாளில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 714 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா
கரோனா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் பலரும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 284ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 725ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சத்து மூன்றாயிரத்து 714 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை மிரட்டும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் பலரும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 83 லட்சத்து 16 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 13 ஆயிரத்து 284ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 725ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சத்து மூன்றாயிரத்து 714 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.