உலக நாடுகளை மிரட்டி வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 823 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 50 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 77 லட்சத்து ஆறாயிரத்து 841ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (ஆக. 31) ஒரே நாளில் மட்டும் இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 41 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.