ETV Bharat / international

சீனா: மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி

author img

By

Published : Jun 25, 2021, 11:55 AM IST

சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

central China
மார்ஷியல் ஆர்ட்ஸ்

பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சுமார் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், இவ்விவகாரம் குறித்து ஹெனன் மாகாணம், ஷாங்கியு நகர அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்டமாக, பள்ளியின் பொறுப்பாளரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!

பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளியில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சுமார் 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், இவ்விவகாரம் குறித்து ஹெனன் மாகாணம், ஷாங்கியு நகர அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

முதற்கட்டமாக, பள்ளியின் பொறுப்பாளரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஹபீஸ் சயீத் வீட்டருகே கார் குண்டுவெடிப்பு- மூவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.