ETV Bharat / international

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

author img

By

Published : Jan 2, 2021, 10:04 PM IST

பெய்ஜிங்: திறன்சார்ந்த பங்காளித்துவத்தை வளப்படுத்தி, வளர்ச்சியை விரைவுப்படுத்தி புதிய சகாப்தத்தை உருவாக்க ஆசியான் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

'China ready to work with ASEAN to further enrich partnership
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “கடந்த 1967ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, சீனா அதனோடு நெருங்கிய தோழமையாக உள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை நல்கும் மிகவும் வெற்றிகரமாக செயலாற்றிவரும் ஆசியானோடு கடந்த 2020ஆம் ஆண்டில் முதல் முறையாக சீனா மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளாக மாறியது.

உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்க மிகப்பெரிய பொருளாதார தளத்தைக் கொண்ட இரு தரப்பும் (சீனா மற்றும் ஆசியான்) விரிவான பிராந்திய பொருளாதார கூட்டாண்மை (ஆர்.சி.இ.பி.) கையெழுத்திட்டன. சீனா-ஆசியான் ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று மைல் கல்லாக இது அமைந்தது.

2021ஆம் ஆண்டில் சீனாவும், ஆசியான் கூட்டமைப்பும் தங்களது உரையாடல் உறவுகளின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ளன. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பெய்ஜிங் புதிய வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

கோவிட் -19 தொற்றுநோயை வீழ்த்த ஆசியான் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட சீனா தயாராக உள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார மீட்சியை மேம்படுத்தி நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் திறன்சார்ந்த பங்காளித்துவத்தை வளப்படுத்தி, விரைவுப்படுத்தி புதிய சகாப்தத்தை உருவாக்க உறுதியுடன் இணைந்து செயலாற்ற சீனா தயாராக உள்ளது” என்றார்.

வியட்நாம், புருனே, கம்போடியா, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பே ஆசியான் என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

இது தொடர்பாக ஊடகங்களிடையே பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “கடந்த 1967ஆம் ஆண்டு தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, சீனா அதனோடு நெருங்கிய தோழமையாக உள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை நல்கும் மிகவும் வெற்றிகரமாக செயலாற்றிவரும் ஆசியானோடு கடந்த 2020ஆம் ஆண்டில் முதல் முறையாக சீனா மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளாக மாறியது.

உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய சுதந்திர வர்த்தகப் பகுதியை உருவாக்க மிகப்பெரிய பொருளாதார தளத்தைக் கொண்ட இரு தரப்பும் (சீனா மற்றும் ஆசியான்) விரிவான பிராந்திய பொருளாதார கூட்டாண்மை (ஆர்.சி.இ.பி.) கையெழுத்திட்டன. சீனா-ஆசியான் ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று மைல் கல்லாக இது அமைந்தது.

2021ஆம் ஆண்டில் சீனாவும், ஆசியான் கூட்டமைப்பும் தங்களது உரையாடல் உறவுகளின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ளன. இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பெய்ஜிங் புதிய வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்போடு இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு

கோவிட் -19 தொற்றுநோயை வீழ்த்த ஆசியான் கூட்டமைப்போடு ஒன்றிணைந்து செயற்பட சீனா தயாராக உள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார மீட்சியை மேம்படுத்தி நிலையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் திறன்சார்ந்த பங்காளித்துவத்தை வளப்படுத்தி, விரைவுப்படுத்தி புதிய சகாப்தத்தை உருவாக்க உறுதியுடன் இணைந்து செயலாற்ற சீனா தயாராக உள்ளது” என்றார்.

வியட்நாம், புருனே, கம்போடியா, மியான்மர், மலேசியா, பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பே ஆசியான் என அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க : புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.