இந்தோனேசியாவில் இன்று 6.5 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஆனால், அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
மலுக்கு தீவில் அருகே, இந்தோனேசிய நேரப்படி காலை சுமார் 8.45 மணிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதில், ஆறு பேர் பலியானதாகவும், ஏராளாமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பசிபிக் எரிமலை வளையத்துக்குள் அமைந்திருக்கும் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.