ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான நங்கர்ஹாரின் தலைநகர் ஜலாலாபாத். இந்நகரில் உள்ள மின்னணு தேசிய அடையாள அட்டைத் துறை அலுவலகம் அருகே சில பயங்கராவதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டயில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 15 பயங்கரவாதிகள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் அடுத்து வாரம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.