ETV Bharat / international

'வெளிநாடுகளில் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி' - ட்ரம்ப்

வாஷிங்டன்: வெளிநாடுகளில் தங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கவுள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 15, 2020, 6:35 PM IST

Trump
Trump

கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, அந்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் சீனாவில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டன.

ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலையில் ஒரு பகுதியைச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றவுள்ளதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவருபவர்களுக்கு புதிய வரி இருக்காது.

ஆப்பிள் நிறுவனம், தற்போது இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அப்படிச் செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு நாங்கள் அதிக வரி விதிக்க வேண்டியிருக்கும். இது ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரானது போல தோன்றலாம். ஆனால், எங்களால் தொடர்ந்து இதை அனுமதிக்க முடியாது.

மற்ற நாடுகளைப் போல, நாங்களும் இருக்க விரும்புகிறோம். எனவே, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை 100 விழுக்காடு அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து தனது திட்டம் குறித்து பேசிய அவர், "இந்த நிறுவனங்கள் சீனாவுக்கு மட்டும் செல்லவில்லை. இந்தியா, அயர்லாந்து உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் செல்கின்றன. அவர்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துவர ஏதாவது ஒரு சலுகை தேவை. எனவே, நான் இதைச் செய்தே ஆக வேண்டும். கூடுதல் வரி விதிக்கத் தொடங்கினால் அவர்கள் வேறுவழியின்றி, நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யத் தொடங்குவார்கள்.

இப்போது விநியோகச் சங்கிலியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் அனைத்துப் பொருள்களையும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால், நமது விநியோகச் சங்கிலிகளில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது" என்றார்.

இதையும் படிங்க: வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?

கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. கரோனா பரவல் காரணமாக, அந்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியது. இதனால் சீனாவில் தங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டன.

ஆப்பிள் நிறுவனம், தனது தயாரிப்பு தொழிற்சாலையில் ஒரு பகுதியைச் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றவுள்ளதாகச் சமீபத்தில் செய்தி வெளியானது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இந்தச் சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவருபவர்களுக்கு புதிய வரி இருக்காது.

ஆப்பிள் நிறுவனம், தற்போது இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அப்படிச் செய்தால், ஆப்பிள் நிறுவனத்திற்கு நாங்கள் அதிக வரி விதிக்க வேண்டியிருக்கும். இது ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிரானது போல தோன்றலாம். ஆனால், எங்களால் தொடர்ந்து இதை அனுமதிக்க முடியாது.

மற்ற நாடுகளைப் போல, நாங்களும் இருக்க விரும்புகிறோம். எனவே, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை 100 விழுக்காடு அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து தனது திட்டம் குறித்து பேசிய அவர், "இந்த நிறுவனங்கள் சீனாவுக்கு மட்டும் செல்லவில்லை. இந்தியா, அயர்லாந்து உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் செல்கின்றன. அவர்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துவர ஏதாவது ஒரு சலுகை தேவை. எனவே, நான் இதைச் செய்தே ஆக வேண்டும். கூடுதல் வரி விதிக்கத் தொடங்கினால் அவர்கள் வேறுவழியின்றி, நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யத் தொடங்குவார்கள்.

இப்போது விநியோகச் சங்கிலியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாம் அனைத்துப் பொருள்களையும் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால், நமது விநியோகச் சங்கிலிகளில் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது" என்றார்.

இதையும் படிங்க: வானில் எப்போது திரும்பும் இயல்பு நிலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.