ETV Bharat / international

நிதி உதவி செய்யுங்கள்... சாலையில் ஒன்று திரண்ட சூப்பர் ஹீரோஸ்!

author img

By

Published : May 1, 2020, 11:52 AM IST

மெக்ஸிகோ: சூப்பர் ஹீரோஸ் வேடங்களில் தெரு கலைஞர்கள் பலர் சாலையில் ஒன்று திரண்டு நிதி உதவி செய்யுங்கள் என அரசை கேட்டுக்கொண்டனர்.

dsds
sdss

மெக்ஸிக்கோவில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சாலையில் நடனம் ஆடி மக்களை குஷிப்படுத்தும் தெரு கலைஞர்களால் ஒரு மாதத்திற்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இதனால், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான கலைஞர்கள் அனைவரும், மெக்ஸிகன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சூப்பர் ஹீரோக்கள், கோமாளிகளாக உடையணிந்து தேசிய அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சூப்பர் மேன் வேடமணிந்த நபர் கூறுகையில், "நிகழ்ச்சி இல்லாததால் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவில் தெரு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது நிதி உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை முன்வைத்தனர்.

சாலையில் ஒன்றுதிரண்ட சூப்பர் ஹீரோஸ்

மேலும், சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறுகையில், "கரோனா தொற்று மே மாதத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு கரோனா வைரசால் லேசான அல்லது மிதமான அறிகுறிகள்தான் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்படும் மக்கள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக வயதானவர்களுக்குத்தான் கரோனா பாதிப்பு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படுகிறது" என்றனர்.

இதையும் படிங்க: ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி

மெக்ஸிக்கோவில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சாலையில் நடனம் ஆடி மக்களை குஷிப்படுத்தும் தெரு கலைஞர்களால் ஒரு மாதத்திற்கும் மேலாக நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை. இதனால், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான கலைஞர்கள் அனைவரும், மெக்ஸிகன் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சூப்பர் ஹீரோக்கள், கோமாளிகளாக உடையணிந்து தேசிய அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.

இதுகுறித்து சூப்பர் மேன் வேடமணிந்த நபர் கூறுகையில், "நிகழ்ச்சி இல்லாததால் பணம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவில் தெரு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும் அல்லது நிதி உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை முன்வைத்தனர்.

சாலையில் ஒன்றுதிரண்ட சூப்பர் ஹீரோஸ்

மேலும், சுகாதாரத் துறை ஊழியர்கள் கூறுகையில், "கரோனா தொற்று மே மாதத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். பெரும்பாலான மக்களுக்கு கரோனா வைரசால் லேசான அல்லது மிதமான அறிகுறிகள்தான் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் காரணமாக அவதிப்படும் மக்கள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் குணப்படுத்தி விடலாம். குறிப்பாக வயதானவர்களுக்குத்தான் கரோனா பாதிப்பு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படுகிறது" என்றனர்.

இதையும் படிங்க: ஃபிளமிங்கோ பறவைகள் வாக்கிங் சென்ற க்யூட் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.