ETV Bharat / international

ஊரடங்கில் 50 மில்லியன் போலி செய்திகளை நீக்கிய ஃபேஸ்புக்!

சான் பிரான்சிஸ்கோ: ஊரடங்கு காலகட்டத்தில் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பரவிய 50 மில்லியன் போலி செய்திகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

author img

By

Published : May 14, 2020, 1:06 PM IST

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இணையத்தில் உலாவும் நேரமும் கணிசமாக உயரத் தொடங்கியது. இதை டார்கெட் செய்த சிலர், போலி செய்திகளைப் பதிவிட்டு மக்களைத் திசை திருப்புவதும், பணம் சம்பாதிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்கிற ஒரு முக்கியமான நுட்பத்தை உபயோகித்தது. இதன்மூலம் செய்திகளின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து, உண்மையான செய்திகளை எளிதில் கண்டறிய முடியும். மேலும், பல மொழிகளில் செய்திகள் உலாவுவதால் உண்மையைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களுடன் (fact-checking organizations) ஃபேஸ்புக் இணைந்து பணியாற்றுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, செய்திகளின் தரத்தைக் கண்டறிய AI தொழில்நுட்பத்தையும், உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றுகிறோம். தவறான தகவல்களை கண்டறிந்து நீக்கியும் வருகிறோம். சுமார் மூன்று மாத காலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான போலி செய்திகள் நீக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போல், வன்முறைக் காட்சிகள், ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய பதிவுகளையும் ஃபேஸ்புக் நிர்வாகம் தொடர்ச்சியாக நீக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் இணையத்தில் உலாவும் நேரமும் கணிசமாக உயரத் தொடங்கியது. இதை டார்கெட் செய்த சிலர், போலி செய்திகளைப் பதிவிட்டு மக்களைத் திசை திருப்புவதும், பணம் சம்பாதிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம், தவறான தகவல் பரவுவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) என்கிற ஒரு முக்கியமான நுட்பத்தை உபயோகித்தது. இதன்மூலம் செய்திகளின் உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து, உண்மையான செய்திகளை எளிதில் கண்டறிய முடியும். மேலும், பல மொழிகளில் செய்திகள் உலாவுவதால் உண்மையைக் கண்டறிய உலகெங்கிலும் உள்ள 60க்கும் மேற்பட்ட உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களுடன் (fact-checking organizations) ஃபேஸ்புக் இணைந்து பணியாற்றுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து, செய்திகளின் தரத்தைக் கண்டறிய AI தொழில்நுட்பத்தையும், உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றுகிறோம். தவறான தகவல்களை கண்டறிந்து நீக்கியும் வருகிறோம். சுமார் மூன்று மாத காலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான போலி செய்திகள் நீக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போல், வன்முறைக் காட்சிகள், ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய பதிவுகளையும் ஃபேஸ்புக் நிர்வாகம் தொடர்ச்சியாக நீக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க: கரோனாவை அழிக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை - உலக சுகாதார அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.