ETV Bharat / international

நெவாடாவில் துப்பாக்கி சூடு... 4 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 4, 2020, 2:10 PM IST

லாஸ் வேகாஸ்: நெவாடாவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

நெவாடாவில் துப்பாக்கி சூடு
நெவாடா

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஹென்டர்சன் நகரத்தில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், நான்கு பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பலத்த காயமடைந்த ஒருவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

அச்சமயத்தில்தான், அமெரிக்க அதிபர் தேர்தலும் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது. மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவுடன் இணைந்த ஆஸ்திரேலியா: வரவேற்ற அமெரிக்கா

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ஹென்டர்சன் நகரத்தில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், நான்கு பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பலத்த காயமடைந்த ஒருவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

அச்சமயத்தில்தான், அமெரிக்க அதிபர் தேர்தலும் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரப்பபை ஏற்படுத்தியது. மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவுடன் இணைந்த ஆஸ்திரேலியா: வரவேற்ற அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.