அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரின் முக்கியப் பகுதியில் புதன்கிழமை இரவு, அடையாளம் தெரியாத சிலர் பொதுமக்களை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.
இந்தத் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த பெண் சுமார் 40 முதல் 50 வயது மதிக்கதக்கவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து சியாட்டில் காவல் துறை தலைவர் கார்மென் பெஸ்ட் கூறுகையில், "சம்பவ இடத்தை ஆராயும்போது இது திடீரென்று நடைபெற்ற தாக்குதலைப் போல தெரியவில்லை" என்றார்.
மேலும், அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!