ETV Bharat / entertainment

‘ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடிப்பேன்’.. சர்ச்சை பேச்சுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!

author img

By

Published : May 17, 2023, 9:55 PM IST

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் கொடுத்த பேட்டியில் நடிகை ராஷ்மிகா குறித்து தவறாக பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் நாயகியாக இவர் நடித்த படங்கள் வாரம் ஒன்று வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் 'ஃபர்ஹானா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்கு தெலுங்கு மீடியா ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், புஷ்பா படம் குறித்தும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு குறித்தும் பேசியுள்ளார். ஆனால், அது மீடியாக்களில் ராஷ்மிகாவை விட நான் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அன்பிற்குரிய நண்பர்களே
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், ‘தெலுங்கு திரையுலகில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், ‘எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

இதையும் படிங்க: The Kerala Story : மதமாற்றத்தால் பாதித்த 300 பெண்களுக்கு உதவி... தி கேரளா ஸ்டோரி படக்குழு திட்டம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் நாயகியாக இவர் நடித்த படங்கள் வாரம் ஒன்று வெளியாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் 'ஃபர்ஹானா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் இஸ்லாமிய பெண்ணாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷனுக்கு தெலுங்கு மீடியா ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், புஷ்பா படம் குறித்தும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு குறித்தும் பேசியுள்ளார். ஆனால், அது மீடியாக்களில் ராஷ்மிகாவை விட நான் அந்த வேடத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அன்பிற்குரிய நண்பர்களே
நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், ‘தெலுங்கு திரையுலகில் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்?' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், ‘எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன். ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

இதையும் படிங்க: The Kerala Story : மதமாற்றத்தால் பாதித்த 300 பெண்களுக்கு உதவி... தி கேரளா ஸ்டோரி படக்குழு திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.