ETV Bharat / entertainment

சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்

author img

By

Published : Jun 11, 2022, 6:58 PM IST

’ஜெய்பீம்’ படத்தின் நிஜ கதாநாயகரான ராசாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாழ்ந்து வருவதை அறிந்து நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டிக்கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியை பணம் கொடுத்து நிறைவேற்றினார்.

சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!
சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!

சென்னை: இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தின் உண்மைக் கதாநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாழ்ந்து வருவது குறித்து அறிந்து நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்.

சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!
சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!

சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்துவந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ரூ.1 லட்சம் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் தெரிவித்தார்.

இதற்கு பார்வதி அம்மாள் தரப்பில், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கேச் சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாகத் தகவல் வெளியானது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் லாரன்ஸ் தெரிவித்தார். அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக்கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி பார்வதி அம்மாவின் குடும்பத்தினரைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து தொகையை கொடுத்தார். இதனைை பார்வதி அம்மா, அவருடைய மூத்த மகன் மாரியப்பான், இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சியடைந்த நயன்தாரா

சென்னை: இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, "அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தின் உண்மைக் கதாநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் வாழ்ந்து வருவது குறித்து அறிந்து நடிகர் ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்.

சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!
சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ்!

சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்துவந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ரூ.1 லட்சம் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் தெரிவித்தார்.

இதற்கு பார்வதி அம்மாள் தரப்பில், அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கேச் சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாகத் தகவல் வெளியானது.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் லாரன்ஸ் தெரிவித்தார். அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக்கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்தார். அதன்படி பார்வதி அம்மாவின் குடும்பத்தினரைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து தொகையை கொடுத்தார். இதனைை பார்வதி அம்மா, அவருடைய மூத்த மகன் மாரியப்பான், இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சியடைந்த நயன்தாரா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.