ETV Bharat / entertainment

வருகிறது சர்தார் 2...கன்ஃபார்ம் செய்த படக்குழு...!

author img

By

Published : Oct 25, 2022, 10:59 PM IST

சர்தார் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

சர்தார் இரண்டாம் பாகம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ
சர்தார் இரண்டாம் பாகம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ

தீபாவளியை ஒட்டி கடந்த 21ஆம் தேதி வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

"யாரும் நிம்மதியாக இப்படத்தில் பணியாற்ற முடியாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவ்வளவு உழைப்பைக் கொடுக்க வேண்டிய படம் இது. இதில் பணியாற்றிய அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். திரைக்கதை அமைக்க மிகவும் கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு சமயத்திலும் மிகவும் சிரமமாக இருந்தது. கார்த்தியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அபாரமானது. அதற்கான விடைதான் இப்படத்தின் வெற்றி" எனத் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகன் கார்த்தி,

“மித்ரன் எவ்வளவு பிரச்சினை என்றாலும் பாத்துக்கலாம் என்று சொல்வார். அவுட்புட் நன்றாக வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கதையை நம்ப வைப்பது அவ்வளவு சுலபமல்ல. நாட்டுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அதனைத் திரையில் கொண்டுவருவது மிகவும் கடினம். இப்படம் ஒரு மேஜிக். ரூபனின் எடிட்டிங் சிறப்பாக இருந்தது.

மித்ரன் கதை சொல்லும் போது இருந்த இம்பேக்ட் அப்படியே திரையில் வந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கோவப்பட்டேன். அது எல்லாம் படத்தின் வெற்றிக்காகத்தான். தொடர்ந்து மூன்று படத்தின் வெற்றிக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்ததுதான். இதற்கு மூன்று ஆண்டுகள் உழைப்பு தேவைப்பட்டது. கைதி 2ஆம் பாகம் அடுத்த வருடம் தொடங்குகிறது.” எனத் தெரிவித்தார்.

சர்தார் இரண்டாம் பாகம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ

இதையும் படிங்க: தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்

தீபாவளியை ஒட்டி கடந்த 21ஆம் தேதி வெளியான ‘சர்தார்’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டர் ரூபன், மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், அது தொடர்பான வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன்

"யாரும் நிம்மதியாக இப்படத்தில் பணியாற்ற முடியாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவ்வளவு உழைப்பைக் கொடுக்க வேண்டிய படம் இது. இதில் பணியாற்றிய அனைவரும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர். திரைக்கதை அமைக்க மிகவும் கஷ்டப்பட்டோம். படப்பிடிப்பு சமயத்திலும் மிகவும் சிரமமாக இருந்தது. கார்த்தியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அபாரமானது. அதற்கான விடைதான் இப்படத்தின் வெற்றி" எனத் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய படத்தின் கதாநாயகன் கார்த்தி,

“மித்ரன் எவ்வளவு பிரச்சினை என்றாலும் பாத்துக்கலாம் என்று சொல்வார். அவுட்புட் நன்றாக வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இக்கதையை நம்ப வைப்பது அவ்வளவு சுலபமல்ல. நாட்டுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அதனைத் திரையில் கொண்டுவருவது மிகவும் கடினம். இப்படம் ஒரு மேஜிக். ரூபனின் எடிட்டிங் சிறப்பாக இருந்தது.

மித்ரன் கதை சொல்லும் போது இருந்த இம்பேக்ட் அப்படியே திரையில் வந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் நிறைய கோவப்பட்டேன். அது எல்லாம் படத்தின் வெற்றிக்காகத்தான். தொடர்ந்து மூன்று படத்தின் வெற்றிக்கு நல்ல இயக்குநர்கள் கிடைத்ததுதான். இதற்கு மூன்று ஆண்டுகள் உழைப்பு தேவைப்பட்டது. கைதி 2ஆம் பாகம் அடுத்த வருடம் தொடங்குகிறது.” எனத் தெரிவித்தார்.

சர்தார் இரண்டாம் பாகம் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ

இதையும் படிங்க: தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.