ETV Bharat / elections

கன்னையா குமாருக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பரப்புரை - பரப்புரை

பாட்னா: பெகுசாராய் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் கன்னையா குமாருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் பரப்புரை செய்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்
author img

By

Published : Apr 28, 2019, 9:20 AM IST

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் கன்னையா குமார் பீகாரில் உள்ள பெகுசாராய் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பல சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அங்கு பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்தவகையில், இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மூன்று நாட்களாக பரப்புரை செய்தார். இவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, நடிகர் பிரகாஷ் ராஜ், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் நேற்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர்

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் கன்னையா குமார் பீகாரில் உள்ள பெகுசாராய் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பல சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அங்கு பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்தவகையில், இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மூன்று நாட்களாக பரப்புரை செய்தார். இவரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, நடிகர் பிரகாஷ் ராஜ், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் ஆகியோர் நேற்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர்

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா தலைமையில் தயாரிப்பாளர் சங்கம் செயல்பட வேண்டும் இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேச்சு

ஜே கே இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஐ ஆர் 8. ஒரு விவசாயி,  ஒரு ஐடி பணியாளர் , ஒரு அரசியல்வாதி இந்த மூன்று பேருக்கும் இடையில் நடைபெறும்  பிரச்சனைகளையும் சிக்கல்களையும்  கூறும் படம்தான் 
ஐ - ஆர்- 8. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் இயக்குனர்கள் உதயகுமார் ஆர்கே செல்வமணி பவித்ரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆர்வி உதயகுமார் பேசுகையில்,
விவசாயத்திற்கு முக்கியமாக தேவைப்படுவது தண்ணீர் தண்ணீர் வேண்டும் என்றால் மழை வர வேண்டும் மரங்களை எல்லாம் வெட்டி விட்டால் மழை எப்படி வரும் சின்ன வயசில் சரித்திரப் பாடத்தில் படிச்ச கங்கா பிரமபுத்திரா சட்லஜ் அனைத்து நதிகளிலும் கோடை காலத்திலும் தண்ணீர் கரைபுரண்டு தான் ஓடுகிறது அச்சில் இருந்து வரும் தண்ணீர் பாதி பாகிஸ்தானிற்கு செல்கிறது பாதி நமக்கு பயன்படுகிறது இதிலிருந்து வரும் தண்ணீரை கன்னியாகுமரி வரை ஒரு கால்வாய் வெட்டி அதன் பிறகு அது கடலில் கலக்கச் செய்தால் நமக்கு தண்ணீர் பஞ்சமே இல்லை முதலில் ரோடு போடுவதை நிறுத்திவிட்டு கால்வாய் தோண்டினால் போதும் என்றார். நாடு விவசாய நிலம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தனி மனிதர்களுக்குள்ளும் எல்லா ஆசையும் உணர்வுகளும் இருக்கிறது உணர்வுகள் செத்தவர்கள் இங்கு யாரும் இல்லை. மேலும் தயாரிப்பாளர் சங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைக்கு பாரதிராஜா போன்ற அனுபவம் மிக்கவர்கள்  தலைமையில் நிர்வாகம் நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

ஆர்கே செல்வமணி பேசுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில் விவசாயமும் தமிழ் திரைப்படத்துறையும் ஒரே நிலை உள்ளது இந்த இருவரின் முதலீட்டிற்கும் விலை கிடையாது. விவசாயிக்கு  மானியம் கொடுக்க வேண்டாம் விளைபொருளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்தால் போதும். இன்றுதான் திரைப்படத்துறையும் இணையத்தின் உதவியோடு பெருமுதலாளிகள் எங்களை சாகடித்து  4000 கோடி பணம் ஈட்டுகின்றனர் இதற்கு இந்திய அரசாங்கம் உடந்தையாக உள்ளது இந்த நிலை மாறினால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை சிறந்த திரைப்படங்களை நாங்கள் கொடுப்போம் அதே போன்று விவசாயிகளுக்கு அவர்களின் முதலீட்டிற்கு தகுந்த விலையை அளித்தால் போதுமானது 12 ஆயிரம் கோடி கடன் பெற்றவர்கள் எல்லாம் பிரதமர் அருகில் நிற்கின்றனர் ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இப்பொழுது உள்ள தலைமை சரியான தலைமை தான் ஆனாலும் சரியான தலைமை யோடும் சரியான வழிகாட்டுதலோடு நிர்வாகம் நடந்திருந்தால் ஆக இந்த திரைப்படத்துறை ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கும் ஆனால் அதை தவற விட்டுவிட்டார்கள் பட்சம் வரும் காலத்திலாவது தயாரிப்பாளர் சங்கம் வலிமையாக இருந்தால் மட்டுமே தமிழ் திரைப்படத்துறை நன்றாக வரும் அந்த சங்கத்தை சரியான முறையில் எடுத்துச் செல்வதற்கு சங்க உறுப்பினர்களின் கடமையாகும் என்றார்.

வீடியோ மோஜோவில் அனுப்புகிறேன்.




ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.