ETV Bharat / crime

போலி பட்டா மூலம் ரூ.200 கோடி முறைகேடு செய்த வழக்கில் இருவர் கைது!

author img

By

Published : Jun 23, 2021, 10:10 PM IST

போலியாக ஆவணம் தயாரித்து, நெடுஞ்சாலை திட்டத்தில் நில எடுப்பு தொகையாக 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அரசுக்கே விற்ற வழக்கில் ஆசிஸ் மேத்ரா, செல்வம் ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆசிஸ் மேத்ரா, செல்வம்
போலி பட்டா மூலம் 200 கோடி முறைகேடு

காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டுத் தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

ரூ.200 கோடி முறைகேடு

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் 200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆனால் முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழ்நாடு நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டுதான் தெரியவந்தது.

இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.

8 பேர் மீது 7 வழக்குகள்

அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்து உத்தரவு

கடந்த மார்ச் மாதம் பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில் மேலும் 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக அனாதீனம், மேய்க்கால் கிராமங்கள் புறம்போக்கு நிலங்களாக இருந்துள்ளன. இதனால் அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆறு குழுக்கள்

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, ஆறு வருவாய்த்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர்.

ரூ.126 கோடி முடக்கம்

அந்த அறிக்கையில் போலி பட்டா மூலம் யாருக்காவது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (ஜுன் 22) 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.

இருவர் கைது

இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 30 கோடி பெற்ற சென்னை அசோக் நகரை சேர்ந்த ஆசிஸ் மேத்ரா, மூன்று கோடி பெற்ற செல்வம் ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (ஜுன் 23) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 200 கோடி முறைகேடு வழக்கில் முதற்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இவ்வழக்கானது தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!

காஞ்சிபுரம்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டுத் தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதற்கென மாவட்டத்தில் சிறப்பு வருவாய் அலுவலர் தலைமையில் அலுவலகம் இயங்கி வருகிறது.

ரூ.200 கோடி முறைகேடு

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் இழப்பீட்டு தொகையாக சுமார் 200 கோடியை முறைகேடாக பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஆனால் முறையாக ஆவணங்களை சரி பார்க்காமல் போலி பட்டா வைத்திருந்த சுமார் 70 நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் ரூ.200 கோடி இழப்பீட்டு தொகை வழங்கியது தமிழ்நாடு நில நிர்வாக ஆணையத்திற்கு கடந்தாண்டுதான் தெரியவந்தது.

இது தொடர்பாக தற்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.

8 பேர் மீது 7 வழக்குகள்

அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால், அரசு நிலத்தை போலி பட்டா மாற்றம் செய்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா உள்ளிட்ட அப்போதைய ஶ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நிலவரி திட்ட உதவி அலுவலர் சண்முகம், ஆசிஸ் மேத்தா, செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்து உத்தரவு

கடந்த மார்ச் மாதம் பீமன்தாங்கல் கிராமத்தில் பட்டா பெற்றிருந்த 37 ஏக்கர் நிலத்துக்கான பட்டாவை ரத்து செய்து, நில நிர்வாக ஆணையம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற பன்னீர்செல்வம் அந்த கிராமத்தில் விசாரணை நடத்தியதில் மேலும் 46 ஏக்கர் முறைகேடாக பட்டா பெற்றிருப்பது தெரியவந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக அனாதீனம், மேய்க்கால் கிராமங்கள் புறம்போக்கு நிலங்களாக இருந்துள்ளன. இதனால் அந்த 46 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாவையும் சில நாட்களுக்கு முன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆறு குழுக்கள்

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் எடுக்கப்பட்ட கிராமங்களில், போலி பட்டா குறித்து விசாரிக்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி தாமல் வரை 33 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் வேறு யாராவது போலி பட்டா வைத்து இழப்பீடு தொகை பெற்றனரா என ஆராய, ஆறு வருவாய்த்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆய்வு நடத்தி, அதற்கான அறிக்கையை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திடம் அளிக்க உள்ளனர்.

ரூ.126 கோடி முடக்கம்

அந்த அறிக்கையில் போலி பட்டா மூலம் யாருக்காவது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இழப்பீடு பெற்றது தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (ஜுன் 22) 83 நபர்களில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதில் 126 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.

இருவர் கைது

இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 30 கோடி பெற்ற சென்னை அசோக் நகரை சேர்ந்த ஆசிஸ் மேத்ரா, மூன்று கோடி பெற்ற செல்வம் ஆகிய இருவரை காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (ஜுன் 23) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 200 கோடி முறைகேடு வழக்கில் முதற்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இவ்வழக்கானது தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.