ETV Bharat / crime

’நான் யார் தெரியுமா...’ - போக்குவரத்துக் காவலர்களிடம் சவடால் விட்ட பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jun 6, 2021, 8:59 PM IST

போக்குவரத்துக் காவலர்களை மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!
வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

சென்னை: பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்களை கடுமையாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சேத்துப்பட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்துக் காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் காரில் சென்றுள்ளார். அந்த வாகனத்தை நிறுத்திய காவலர்கள், அப்பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

உடனே அந்தப் பெண் அவரது அம்மாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பெண்ணின் தாயார், என்னவென்று விசாரிக்காமல், ”நான் வழக்கறிஞர், என்னால் அபராதம் செலுத்தமுடியாது” என போக்குவரத்துக் காவலர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.

மேலும் அவரை முகக்கவசம் அணிந்து பேசுமாறு காவலர்கள் அறிவுறுத்தியதற்கு, ’முடியாது’ என்று கூறி மிகவும் மோசமாக மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். பின்னர் அவர் காரின் எண்ணை வைத்து காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் காவலர் ரஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்தப் பெண் வழக்கறிஞர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி

சென்னை: பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர்களை கடுமையாக பேசிய பெண் வழக்கறிஞர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சேத்துப்பட்டு சிக்னலில் சென்னை போக்குவரத்துக் காவலர்கள் ஊரடங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக பெண் ஒருவர் முகக்கவசம் அணியாமல் காரில் சென்றுள்ளார். அந்த வாகனத்தை நிறுத்திய காவலர்கள், அப்பெண்ணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

உடனே அந்தப் பெண் அவரது அம்மாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பெண்ணின் தாயார், என்னவென்று விசாரிக்காமல், ”நான் வழக்கறிஞர், என்னால் அபராதம் செலுத்தமுடியாது” என போக்குவரத்துக் காவலர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.

மேலும் அவரை முகக்கவசம் அணிந்து பேசுமாறு காவலர்கள் அறிவுறுத்தியதற்கு, ’முடியாது’ என்று கூறி மிகவும் மோசமாக மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். பின்னர் அவர் காரின் எண்ணை வைத்து காவலர்கள் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் காவலர் ரஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, அந்தப் பெண் வழக்கறிஞர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.