காஞ்சிபுரம் கலைஞர் சாலை அதியமான் நகர் பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் (எ) அன்பழகன்; இவரது மனைவி சரண்யா (27). இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கர்ப்பிணியான சரண்யா இன்று (ஏப்.8) விடியல் காலையில், தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கண்விழித்து பார்த்த கணவர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரண்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 9 மாதத்தில் மணப்பெண் தற்கொலை செய்திருப்பதால், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: ஐபேக் குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்