ETV Bharat / crime

கள்ளச்சாராயத்தால் இரண்டு பேர் உயிரிழப்பு!

author img

By

Published : May 31, 2021, 7:28 AM IST

கள்ளச்சாராயத்தால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 பேர் உயிரிழப்பு
2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வைப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேந்தங்குடியைச் சேர்ந்தவர் அச்சகத் தொழிலாளியான பிரபு(33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் சுமைத்தூக்கும் தொழிலாளியான செல்வம்(36), வீராசாமி(52), சரத்குமார் (28), செந்தில்(40), சரண்ராஜ்(32) ஆகிய ஐந்து பேருக்கும் கள்ள சாராயத்தை வாங்கிக் கொடுத்து, தானும் குடித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தைக் குடித்த பிரபு, செல்வம் ஆகிய இருவருக்கும் திடீரென கண் பார்வைப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த வீராசாமி, சரத்குமார், செந்தில், சரண்ராஜ் ஆகியோரின் உறவினர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நால்வரையும் சேர்த்தனர்.

சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுகையில், “ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மே மாதத்தில் மட்டும் சாராயக் கடத்தல், விற்பனை செய்தவர்கள், சாராயம் காய்ச்சியவர்கள் என, 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பாண்டி சாராயம் 7,690 லிட்டர், ஊரல் சாராயம் 330 லிட்டர், எரிசாராயம் 495 லிட்டர், 702 மதுபாட்டில்கள், 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: எரிசாராயம் கடத்த பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை: கள்ளச்சாராயம் குடித்த இருவர் கண்பார்வைப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேந்தங்குடியைச் சேர்ந்தவர் அச்சகத் தொழிலாளியான பிரபு(33). இவர், அதே பகுதியைச் சேர்ந்த அம்மாசி மகன் சுமைத்தூக்கும் தொழிலாளியான செல்வம்(36), வீராசாமி(52), சரத்குமார் (28), செந்தில்(40), சரண்ராஜ்(32) ஆகிய ஐந்து பேருக்கும் கள்ள சாராயத்தை வாங்கிக் கொடுத்து, தானும் குடித்துள்ளார்.

கள்ளச்சாராயத்தைக் குடித்த பிரபு, செல்வம் ஆகிய இருவருக்கும் திடீரென கண் பார்வைப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த வீராசாமி, சரத்குமார், செந்தில், சரண்ராஜ் ஆகியோரின் உறவினர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நால்வரையும் சேர்த்தனர்.

சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுகையில், “ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மே மாதத்தில் மட்டும் சாராயக் கடத்தல், விற்பனை செய்தவர்கள், சாராயம் காய்ச்சியவர்கள் என, 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பாண்டி சாராயம் 7,690 லிட்டர், ஊரல் சாராயம் 330 லிட்டர், எரிசாராயம் 495 லிட்டர், 702 மதுபாட்டில்கள், 8 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: எரிசாராயம் கடத்த பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.