கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஐந்தாவது மலையில் எலும்பு கூடாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு நேற்று (பிப்.12) தகவலளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆண் சடலத்தை சோதனை செய்தபோது, ஒரு அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதில் தமிழரசு ஓமலூர், சேலம் என்ற முகவரி இருந்துள்ளது. இதனையடுத்து, ஆலாந்துறை காவல் துறையினர் சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டபோது, கடந்த ஜூன் மாதம் தமிழரசின் தாயார் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த உடலை ஆலாந்துறை காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தமிழரசு இறந்து இரண்டு மாதங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழரசு ஜிம் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு; பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்பட ஐவர் உயிரிழப்பு!