ETV Bharat / city

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

author img

By

Published : Nov 20, 2019, 5:02 PM IST

வேலூர்: திருப்பத்தூர் அருகே எட்டு மாதங்களாக குடிநீர் வழங்காத ஊராட்சி செயலாளரை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

-road-roko-

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிரமங்கலம் ஊராட்சி நேருஜி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த எட்டு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் அப்பகுதி ஊராட்சி செயலாளரை கண்டித்து சி.கே. ஆசிரமம் பகுதியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள்கூறுகையில், தங்கள் பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வந்து சமையல் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப காலதாமதம் ஆவதோடு சரியான நேரத்திற்குள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் போவதாக கூறினர்.

8 மாதம் குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து மக்கள் சாலை மறியல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் அmலரை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் விரைவில் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படியுங்க: திண்டுக்கல் அருகே குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிரமங்கலம் ஊராட்சி நேருஜி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த எட்டு மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் அப்பகுதி ஊராட்சி செயலாளரை கண்டித்து சி.கே. ஆசிரமம் பகுதியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள்கூறுகையில், தங்கள் பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வந்து சமையல் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப காலதாமதம் ஆவதோடு சரியான நேரத்திற்குள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் போவதாக கூறினர்.

8 மாதம் குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து மக்கள் சாலை மறியல்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் அmலரை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் காவல்துறையினர் பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் விரைவில் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படியுங்க: திண்டுக்கல் அருகே குடிநீர் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Intro:திருப்பத்தூர் அருகே 8 மாத காலமாக முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி செயலாளரை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்...
Body:



வேலூர் மாவட்டம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிரமங்கலம் ஊராட்சி பகுதியில் நேருஜி நகர் பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இப்பகுதிக்கு 8 மாத காலமாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து மற்றும் ஊராட்சி செயலாளரை கண்டித்தும் சிகே.ஆசிரமம் பகுதியிலிருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் 50 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்....

பொதுமக்கள் கோரிக்கை

இந்த குக்கிராம பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் எங்களுக்கு 8 மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம் நாங்கள் குடி தண்ணீர் எடுக்க சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிணற்றில் குடிநீர் எடுத்து வந்து சமையல் செய்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப காலதாமதம் ஆகிறது அதுமட்டுமின்றி நாங்கள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கூலி வேலைக்கு செல்ல காலதாமதம் ஆகிறது நாங்கள் பலமுறை ஊராட்சி செயலாகரியிடம் பழுதடைந்துள்ள ஆழ்துளை பைப்புகளை சரி செய்து குடிநீர் வழங்க புகார் அளித்தோம் ஆனால் இதோ அதோ என்று காலம் கடத்தி உயர் அதிகாரிகளை பார்க்கச் கூறுகிறார் நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சென்று மனு அளித்தோம் ஆனால்
எந்தஒரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளரரை கண்டித்து இந்நிலையில்
ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இருந்தும் அப்பகுதிக்கு குடிநீர் வழங்குவது இல்லை எட்டு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் உதவி காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் கண்ணன் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் விரைவில் உங்களுக்கு குடிதண்ணீர் வழங்க இப்பகுதி ஏற்பாடு செய்வதாக கூறியதன் அடிப்படையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

ஊராட்சி செயலாளர் இடம் கேட்டால் எட்டு மாதம் இல்லை ஆறு மாத காலமாக தான் இந்த பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்களிடம் ஆவேசமாக பேசுகிறார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.