ETV Bharat / city

சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு தந்தையை தெருவில் தள்ளிய மகன்... நாட்டுக்காக சேவையாற்றிய முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த கொடுமை - son bought the property of his father in Vellore

வேலூர்: சொந்த மகனே சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு தந்தையை தெருவில் தள்ளிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டுக்காக சேவையாற்றிய முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த கொடுமை
author img

By

Published : Sep 10, 2019, 7:25 AM IST

வேலூர் மாவட்டம் இடையஞ்சாத்து கணேச்சாரி நகரை சேர்ந்த சொக்கலிங்கம்(83) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகள்களும் தியாகராஜன்(57) என்ற மகனும் உள்ளனர். தியாகராஜனும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன் தந்தையை கடைசி வரை பராமரித்துக் கொள்வதாகக் கூறி அவரது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது ஆனால் சொத்தை எழுதி வாங்கிய பின்பு அவருடைய தந்தையை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இந்நிலையில் சொக்கலிங்கம் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை கூறி முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சொக்கலிங்கம் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தார். ஆஸ்துமா நோயாளியான அவர் வரும்போது ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகளுடன் வந்திருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மூச்சு விடக் கூட சிரமப்படும் சொக்கலிங்கம், என் ஒரே மகனை நம்பி ஏமாந்து விட்டேன் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு என்னைத் தெருவில் தள்ளி விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் மனு அளித்தார். இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதேபோல் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டுப் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்திய சம்பவத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோரின் சொத்தை மகனிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டம் இடையஞ்சாத்து கணேச்சாரி நகரை சேர்ந்த சொக்கலிங்கம்(83) ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மூன்று மகள்களும் தியாகராஜன்(57) என்ற மகனும் உள்ளனர். தியாகராஜனும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன் தந்தையை கடைசி வரை பராமரித்துக் கொள்வதாகக் கூறி அவரது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது ஆனால் சொத்தை எழுதி வாங்கிய பின்பு அவருடைய தந்தையை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

இந்நிலையில் சொக்கலிங்கம் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை கூறி முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சொக்கலிங்கம் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தார். ஆஸ்துமா நோயாளியான அவர் வரும்போது ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர், வெண்டிலேட்டர் கருவிகளுடன் வந்திருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மூச்சு விடக் கூட சிரமப்படும் சொக்கலிங்கம், என் ஒரே மகனை நம்பி ஏமாந்து விட்டேன் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு என்னைத் தெருவில் தள்ளி விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் மனு அளித்தார். இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் இதேபோல் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டுப் பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்திய சம்பவத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோரின் சொத்தை மகனிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Intro:சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை தெருவில் தள்ளிய மகன்... நாட்டுக்காக சேவையாற்றிய முன்னாள் ராணுவ வீரருக்கு நடந்த கொடுமை Body:வேலூர் மாவட்டம் இடையஞ்சாத்து கணேச்சாரி நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம்(83) இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவருக்கு மூன்று மகள்களும் தியாகராஜன(57) என்ற மகனும் உள்ளனர் தியாகராஜனும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் இந்த நிலையில் தன் தந்தையை கடைசி வரை பராமரித்து கொள்வதாக கூறி அவரது சொத்துக்கள் அனைத்தையும் தியாகராஜன் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது ஆனால் சொத்தை எழுதி வாங்கிய பின்பு சொக்கலிங்கத்தை பராமரிக்காமல் தியாகராஜன் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். சொக்கலிங்கம் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டுள்ளார் ஆனாலும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சொக்கலிங்கம் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தார் ஆஸ்துமா நோயாளியான சொக்கலிங்கம் தான் வரும்போது ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளுடன் வந்திருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கவலையடையச் செய்தது. மூச்சுவிட கூட சிரமப்படும் சொக்கலிங்கம், என் ஒரே மகனை நம்பி ஏமாந்து விட்டேன் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிவிட்டு என்னை தெருவில் தள்ளி விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்தார் எனது சொத்துக்களை இழந்து விட்டு பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றேன் எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படி மாவட்ட ஆட்சியரிடம் சொக்கலிங்க மனு அளித்தார் வெறும் பணத்துக்காக ஆசைப்பட்டு தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் தற்போதைய இளைய சமுதாயத்தினருக்கு மத்தியில், நாட்டுக்காக உழைத்த ராணுவ வீர்ரின் சொத்துக்களை அதே ராணுவத்தில் பணிபுரந்த அவரது மகனே ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டு அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலையில் இதேபோல் சொத்துக்களை எழுதி விட்டு பெற்றோர்களை வீட்டை விட்டு துரத்திய சம்பவத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பெற்றோரின் சொத்தை மகனிடம் இருந்து மீட்டுக் கொடுத்தார் அந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது எனவே அந்த வகையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரமும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து சொக்கலங்கத்தின் சொத்துக்களை மீட்டு கொடுப்பாரா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளதுConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.