ETV Bharat / city

ரூ.15.6 கோடி மதிப்பீட்டில் வேலூரில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களின் குடி மராமரத்து பணிக்காக 15.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

kudimaramathu
author img

By

Published : Aug 16, 2019, 11:34 PM IST

தமிழ்நாடு அரசு குடிமராமத்தது திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறையின் கீழ் வராத ஏரிகுளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமரத்து பணியை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகசுந்தரம், "வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக 15.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் பேட்டி

மன்னராட்சி காலத்தில் விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்காக ஏரி, குளங்களை வெட்டி மழை காலத்தில் மழை நீரை சேகரித்து விவசாயம், குடிநீர் மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் இதனை அரசு கவனிக்காமல் விட்டதால் ஏரிகள் வண்டல் மண் நிறைந்து ஏரியில் நீரின் கொள்ளளவு குறைந்த காரணத்தினாலும், பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசு மழைநீரைச் சேகரிக்க மீண்டும் ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்கி குடிமராமத்து பணிகளை தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு குடிமராமத்தது திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறையின் கீழ் வராத ஏரிகுளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமரத்து பணியை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சண்முகசுந்தரம், "வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை தூர்வாருவதற்காக 15.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி இன்று வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் பேட்டி

மன்னராட்சி காலத்தில் விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்காக ஏரி, குளங்களை வெட்டி மழை காலத்தில் மழை நீரை சேகரித்து விவசாயம், குடிநீர் மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் இதனை அரசு கவனிக்காமல் விட்டதால் ஏரிகள் வண்டல் மண் நிறைந்து ஏரியில் நீரின் கொள்ளளவு குறைந்த காரணத்தினாலும், பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டன.

இந்நிலையில் தமிழக அரசு மழைநீரைச் சேகரிக்க மீண்டும் ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்கி குடிமராமத்து பணிகளை தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

Intro:வாணியம்பாடி அருகே ஏரி குடி மராமரத்து பணியை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை குடி மராமரத்து பணிக்காக 15.6 கோடி நீதி ஒதுக்கீடு. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேட்டிBody:.



தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் பஞ்சத்தை போக்க ஏரி குளங்களை தூர்வாரி மழை நீர் சேகரிப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் துவங்கிய நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் தூர்வாரி கரைகளை பலப்படுத்தவும் குடி மராமத்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்



வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு என்ற பகுதியில் உள்ள ஏரியை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமரத்து பணியை வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்

பின்னர் செய்தியாளர் சந்தித்த சண்முகசுந்தரம் கூறியதாவது

கடந்த மன்னராட்சி காலத்தில் விவசாயம், குடிநீர் ஆகியவற்றுக்காக ஏரி மற்றும் குளங்களை வெட்டி மழை காலத்தில் மழை நீரை சேகரித்து விவசாயம் மற்றும் குடிநீர் மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வந்தன. காலப்போக்கில் இதனை அரசு கவனிக்காமல் விட்ட காரணத்தினால் ஏரிகள் வண்டல் மண் கல் நிறைந்து ஏரியின் நீரின் கொள்ளளவு குறைந்த காரணத்தினாலும், பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு மழைநீர் சேகரிக்க மீண்டும் ஏரி குளங்களை தூர்வார நிதி ஒதுக்கி அதற்கான பணியை குடிமராமரத்து பணிகளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்களை தூர் வதற்காக 15.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியை வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டில் துவக்கப்பட்டு உள்ளது என கூறினார்

இதனைத் தொடர்ந்து அமைச்சர் வீரமணி கூறியதாவது வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டமாக உள்ளது. இதனை பிரிக்க வேண்டும் என்று மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்ற பின்னர் தன்னுடைய உறையில் வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர் தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், வேலூர் தலைமை இடமாக கொண்ட ஒரு மாவட்டமும், ராணிப்பேட்டை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம் அமைக்க அதற்கான பணியை முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், மாவட்ட அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து வருவதாக கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.