ETV Bharat / city

தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்: இன்று முதல் அமல்

author img

By

Published : Aug 29, 2019, 7:13 AM IST

வேலூர்: தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Vellore sp pravesh kumar

நாடு முழுதும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை இரண்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைகவசம் அணியாதவர்களுக்கு நூறு ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'வேலூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்! இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுதும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை இரண்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைகவசம் அணியாதவர்களுக்கு நூறு ரூபாயாக இருந்த அபராதத் தொகை தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 'வேலூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும்! இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Intro:வேலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் உஷார்... நாளை முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் இல்லாவிட்டாலும் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கைBody:நாடு முழுதும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அவரது தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை இரண்டாயிரத்திலிருந்து 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த சூழலில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் எச்சரிக்கை எடுத்துள்ளார் இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வேலூர் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் நாளை முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார் காவல் கண்காணிப்பாளர் இந்த திடீர் எச்சரிக்கையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர் ஹெல்மெட்டை பொருத்தவரை ஏற்கனவே ரூ100 அபராதத் தொகை விதிக்கப்பட்டது தற்போது புதிய நடைமுறைப்படி ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் தொகை செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது எனவே காவல் கண்காணிப்பாளரின் எச்சரிக்கையால் வேலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.