வேலூர்: தமிழ்நாடு காவல்துறையின் துப்பறியும் நாய் படைப்பிரிவில் 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் லூசி, பணி நிறைவு பெறுவதைக் கொண்டாடடும் விதமாக மாவட்ட காவல்துறையின் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
![கேக் வெட்டி கொண்டாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-09-dog-farewell-scr-pic-tn10018_01062022200634_0106f_1654094194_384.jpg)
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் காவல்துறையினருக்கு பல முக்கிய குற்ற வழக்குகளில் லூசி, திறம்பட பணியாற்றியுள்ளது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் சில்வர் பதக்கத்தை வென்றது லூசி நாய்.
![மோப்ப நாய் லூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-09-dog-farewell-scr-pic-tn10018_01062022200634_0106f_1654094194_537.jpg)
இதையும் படிங்க: தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கென தனியாக மோப்பநாய் படைப்பிரிவு அமைப்பு!