ETV Bharat / city

20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா - ஜாதி, மத வேறுபாடின்றி போட்டி போட்டு மீன் பிடித்த பொதுமக்கள்

author img

By

Published : May 11, 2022, 2:16 PM IST

மணப்பாறை அருகே 20 வருடங்களுக்கு பிறகு பூவர்த்தி கோயில் பெரிய குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடின்றி போட்டி போட்டு பொதுமக்கள் மீன் பிடித்தனர்.

20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா
20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா

திருச்சி: மணப்பாறை அடுத்த முச்சந்தி பூவர்த்தி கோயில் பெரிய குளத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்து துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடி விழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடிய மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.

கடந்த 20 வருடங்களுக்கு பிறகு இன்று(மே.11) நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். ஊத்தா,வலை,கூடை,பரி, கச்சாகளைக் கொண்டு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி,கெண்டை, விரால் வகை மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா
20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா

இதையும் படிங்க: திருச்சூர் பூரம் திருவிழா- கரோனா ஊரடங்கிற்கு பின் களைகட்டியது

திருச்சி: மணப்பாறை அடுத்த முச்சந்தி பூவர்த்தி கோயில் பெரிய குளத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்து துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடி விழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடிய மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.

கடந்த 20 வருடங்களுக்கு பிறகு இன்று(மே.11) நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் மீன் பிடித்தனர். ஊத்தா,வலை,கூடை,பரி, கச்சாகளைக் கொண்டு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி,கெண்டை, விரால் வகை மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா
20 வருடங்களுக்கு மீன்பிடி திருவிழா

இதையும் படிங்க: திருச்சூர் பூரம் திருவிழா- கரோனா ஊரடங்கிற்கு பின் களைகட்டியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.