ETV Bharat / city

ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு வேட்டை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் வனத் துறை அமைச்சர் சீனிவாசன் வாக்கு வேட்டை நடத்தினார்.

TN Minister Seenivasan vote collection in Ottanchattram
TN Minister Seenivasan vote collection in Ottanchattram
author img

By

Published : Dec 26, 2019, 11:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூமாதேவி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் முருகானந்தம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அப்போது அவர், "ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால்தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாக வந்தடையும். 234 தொகுதிக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்வதைப்போல்தான் ஒட்டன்சத்திரத்திற்கும் ஒதுக்கீடு செய்து அதன் மூலமாகத்தான் அரசுப்பணிகள் நடைபெறுகின்றன.

இந்தத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ சொல்லி நடைபெறுவதில்லை. எனவே இதுபோன்ற பொய் பரப்புரைகளை நம்பாதீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி அனைத்துக் கடன்களையும் ரத்து செய்கிறோம் எனச் சொல்லியதை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

இது எல்லாம் பொய் என்று புரிந்துகொண்ட மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆதரவளித்து மாபெரும் வெற்றியைத் தந்தார்கள். இதேநிலைதான் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். ஊழல் ஆட்சி என எதிர்க்கட்சியினர் பொய் பரப்புரை செய்துவருகின்றனர். எந்தவித ஊழல் இல்லாத ஆட்சியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவருகின்றனர்" என்றார்.

ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது அனைத்துக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூமாதேவி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் முருகானந்தம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

அப்போது அவர், "ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால்தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாக வந்தடையும். 234 தொகுதிக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்வதைப்போல்தான் ஒட்டன்சத்திரத்திற்கும் ஒதுக்கீடு செய்து அதன் மூலமாகத்தான் அரசுப்பணிகள் நடைபெறுகின்றன.

இந்தத் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ சொல்லி நடைபெறுவதில்லை. எனவே இதுபோன்ற பொய் பரப்புரைகளை நம்பாதீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எதிர்க்கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி அனைத்துக் கடன்களையும் ரத்து செய்கிறோம் எனச் சொல்லியதை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

இது எல்லாம் பொய் என்று புரிந்துகொண்ட மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆதரவளித்து மாபெரும் வெற்றியைத் தந்தார்கள். இதேநிலைதான் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பிரதிபலிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். ஊழல் ஆட்சி என எதிர்க்கட்சியினர் பொய் பரப்புரை செய்துவருகின்றனர். எந்தவித ஊழல் இல்லாத ஆட்சியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவருகின்றனர்" என்றார்.

ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது அனைத்துக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Intro:ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்

Body:திண்டுக்கல் 26.12.2019
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பூமாதேவி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் முருகானந்தம் ஆகியோர்க்கு வாக்கு சேகரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். அப்போது... ஆளும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு முழுமையாக வந்தடையும். 234 தொகுதிக்கும் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்வதைப்போல் தான் ஒட்டன்சத்திரத்திற்கும் ஒதுக்கீடு செய்து அதன் மூலமாகத்தான் அரசுப்பணிகள் நடைபெறுகிறது. இந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ சொல்லி நடைபெறுவதில்லை. எனவே இதுபோன்ற பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எதிர்கட்சியினர் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி அனைத்து கடனையும் ரத்து செய்கிறோம் என சொல்லியதை நம்பி மக்கள் ஓட்டு போட்டாங்க. இது எல்லாம் பொய் என்று பொய் என்று புரிந்து கொண்ட மக்கள் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆதரவு அளித்து மாபெரும் வெற்றியை தந்தார்கள். இதே நிலைதான் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். ஊழல் ஆட்சி என எதிர்கக்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்தவித ஊழல் இல்லாத ஆட்சியை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்தி வருகின்றனர் எனவும் அரசின் திட்டங்களை எடுத்துக்கூறியும் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.Conclusion:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு சேகரித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.