ETV Bharat / city

நெருங்கிய நண்பர்களால் கொல்லப்பட்ட அஜித் ரசிகர்! - Killed by friends

திருச்சி: அஜித் ரசிகரை கொலை செய்து எரித்ததாக அவருடைய நண்பர்கள் மூன்று பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உற்ற நண்பர்களாலே கொல்லப்பட்ட அஜித் ரசிகர்
author img

By

Published : Aug 28, 2019, 12:25 PM IST

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் தமிழழகன்(24). அஜித் ரசிகரான இவர் கடந்த 7ம் தேதி சினிமாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை தேடி வந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாயமான தமிழழகன் கடந்த 7ஆம் தேதி பொன்மலை பகுதியில் தனது நண்பர்கள் ஆட்டோ ஜெகன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 3 பேரும் தமிழழகனை அடித்துக் கொலைசெய்து பொன்மலை பகுதியில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் மூன்று பேரையும் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடலை எரித்ததாக கூறப்படும் கணேஷபுரம் சுடுகாட்டில் தமிழழகனின் எலும்புகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நெருங்கிய நண்பர்களாலேயே தமிழழகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் தமிழழகன்(24). அஜித் ரசிகரான இவர் கடந்த 7ம் தேதி சினிமாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொன்மலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை தேடி வந்தனர்.

இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மாயமான தமிழழகன் கடந்த 7ஆம் தேதி பொன்மலை பகுதியில் தனது நண்பர்கள் ஆட்டோ ஜெகன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 3 பேரும் தமிழழகனை அடித்துக் கொலைசெய்து பொன்மலை பகுதியில் உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் எரித்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் மூன்று பேரையும் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நடந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடலை எரித்ததாக கூறப்படும் கணேஷபுரம் சுடுகாட்டில் தமிழழகனின் எலும்புகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நெருங்கிய நண்பர்களாலேயே தமிழழகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருச்சியில் அஜித் ரசிகரை கொலை செய்து எரித்ததாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Body:திருச்சி: திருச்சியில் அஜித் ரசிகரை கொலை செய்து எரித்ததாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் தமிழழகன். (24). அஜித் ரசிகரான இவர் கடந்த 7ம் தேதி சினிமாவுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழழகனை தேடி வந்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாயமான தமிழழகன் ஏற்கனவே பொன்மலை பகுதியில் குடியிருந்து உள்ளார். அங்குள்ள நண்பர்களை சந்திப்பதற்காக கடந்த 7ம் தமிழழகன் பொன்மலை சென்றுள்ளார். அங்கு நண்பர்கள் ஆட்டோ ஜெகன், கார்த்திக், மணிகண்டன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதையில் பழைய பிரச்சினை குறித்து நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தமிழழகனை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் ஏற்றி பொன்மலை தங்கேஸ்வரி நகர் அருகே உள்ள கணேசபுரம் சுடுகாட்டில் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை எரித்ததாக கூறப்படும் கணேஷபுரம் சுடுகாட்டில் தமிழழகனின் எலும்புகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சம்பவம் நடந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் தமிழழகனின் எலும்புகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Conclusion:சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆகிவிட்டதால் தமிழழகன் எலும்புகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.