ETV Bharat / city

குழந்தைகள் உரிமை மீறல் புகார்களுக்கு சிறப்பு விசாரணை

திருச்சி: குழந்தைகள் உரிமை மீறல் புகார்களை விசாரிக்க இந்தியா முழுவதும் 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஆனந்த்
author img

By

Published : Jun 7, 2019, 7:21 PM IST

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து அவர், "நாடு முழுவதும் குழந்தைகள் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணை அமர்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் உள்பட பல துறை அலுவலர்கள் இடம் பெறுவார்கள்.

இந்த அமர்வு கூடுவதற்கு முன்பு பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படும். முக்கிய இடங்களில் தண்டோரா போடப்படும்.

செய்தித்தாள்கள், டிவி சேனல்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுயமாக 83 வழக்குகளை பதிவு செய்தது, இதில் 39 வழக்குகளுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார்.

நாடுமுழுவதும் குழந்தைகள் வன்கொடுமை புகார்களுக்கு வரும் 21ஆம் தேதி சிறப்பு விசாரணை

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து அவர், "நாடு முழுவதும் குழந்தைகள் உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணை அமர்வு மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் உள்பட பல துறை அலுவலர்கள் இடம் பெறுவார்கள்.

இந்த அமர்வு கூடுவதற்கு முன்பு பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படும். முக்கிய இடங்களில் தண்டோரா போடப்படும்.

செய்தித்தாள்கள், டிவி சேனல்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுயமாக 83 வழக்குகளை பதிவு செய்தது, இதில் 39 வழக்குகளுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்றார்.

நாடுமுழுவதும் குழந்தைகள் வன்கொடுமை புகார்களுக்கு வரும் 21ஆம் தேதி சிறப்பு விசாரணை
Intro:குழந்தை உரிமை மீறல் புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறினார்.


Body:திருச்சி:
குழந்தைகள் உரிமை மீறல் புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு ஜூன் 21-ம் தேதி முதல் செயல்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் கூறினார். திருச்சி மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வதற்காக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் இன்று திருச்சி வந்தார். அப்போது அவர் திருச்சி சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாடு முழுவதும் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க 727 மாவட்டங்களில் சிறப்பு அமர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணை அமர்வு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதில் ஆட்சியர், முதன்மை கல்வி அதிகாரி, குழந்தைகள் நல அலுவலர் உள்பட பல துறை அதிகாரிகள் இதில் இடம் பெறுவார்கள். இந்த அமர்வு கூடுவதற்கு முன்பு பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படும். முக்கிய இடங்களில் தண்டோரா போடப்படும். இது புகார்களை விசாரிக்கும் மையமாக மட்டுமில்லாமல் புகார்கள் மீது தீர்வு காண மையமாக இருக்கும். செய்தித்தாள்கள், டிவி.க்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் குழந்தை உரிமை மீறல் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ஆணையம் சுயமாக 83 வழக்குகளை பதிவு செய்தது. இதில் 39 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. தீர்வு காணப்பட்டதில் 13 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் சராசரியாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து உள்ளது. ஆணையத்தின் செயல்பாட்டில் மத்திய அரசின் குறுக்கீடு இல்லை. நாங்கள் சுயமாக செயல்படுகிறோம் என்றார்.


Conclusion:ஆணையும் பதிவுசெய்த 83 வழக்குகளில் 39 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று ஆனந்த் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.