ETV Bharat / city

மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - rain news update

திருச்சி: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக இருப்பதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister R.B. udayakumar press meet
author img

By

Published : Sep 26, 2019, 3:33 PM IST

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை நமக்கு கிடைக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் நமக்கு கிடைத்துள்ளது. அதோடு அண்டை மாநிலங்களில் பெய்த கூடுதல் மழை காரணமாக நமக்கு கூடுதல் நீர் கிடைத்துள்ளது.

பருவமழை காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது வலுவிழக்கும். சமயங்களில் புயலாக மாறிவிடும்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
இதை எதிர்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு குழுபோல் மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது. இந்த குழுக்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் 121 பல்நோக்கு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் அடையாளம் காணப்பட்டு அவசர காலத்தில் மக்கள் தங்க தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான உணவு மற்றும் மருந்து வகைகளும் இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் பார்க்கவும் : இடி மின்னலுடன் கனமழை - வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை நமக்கு கிடைக்கும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் நமக்கு கிடைத்துள்ளது. அதோடு அண்டை மாநிலங்களில் பெய்த கூடுதல் மழை காரணமாக நமக்கு கூடுதல் நீர் கிடைத்துள்ளது.

பருவமழை காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது வலுவிழக்கும். சமயங்களில் புயலாக மாறிவிடும்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு
இதை எதிர்கொள்ள அனைத்துத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு குழுபோல் மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது. இந்த குழுக்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் 121 பல்நோக்கு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இதர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் அடையாளம் காணப்பட்டு அவசர காலத்தில் மக்கள் தங்க தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான உணவு மற்றும் மருந்து வகைகளும் இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் பார்க்கவும் : இடி மின்னலுடன் கனமழை - வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

Intro:பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக இருப்பதாக வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார்.


Body:திருச்சி:
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக இருப்பதாக வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை நமக்கு கிடைக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் நமக்கு கிடைத்துள்ளது. அதோடு அண்டை மாநிலங்களில் பெய்த கூடுதல் மழை காரணமாக நமக்கு கூடுதல் நீர் கிடைத்துள்ளது. பருவமழை காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். இது சமயங்களில் வலுவிழக்கும். சமயங்களில் புயலாக மாறிவிடும்.
இதை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
தமிழகம் முழுவதும் 5 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கும் பகுதி மிக அதிக பாதிப்பு உள்ள பகுதியாகவும், 5 அடிக்கு கீழ் தண்ணீர் தேங்கும் பகுதி அதிக பாதிப்பு உள்ள பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது போல் நான்கு வகையாக பிரித்து 4 ஆயிரத்து 399 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத் தவிர இதர பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்ட உடன் உடனடியாக முதலுதவிக்கு சென்றடையும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு போல் மாநில பேரிடர் மீட்பு குழு தயாராக உள்ளது. இந்த குழுக்களுக்கு நவீன உபகரணங்கள் வாங்குவதற்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை போன்ற துறைகள் மூலம் ஜேசிபி, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள், மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஒளி வழங்க சிறப்பு விளக்குகள் போன்றவை இந்த நிதி மூலம் வாங்கி பயன்படுத்தப்படும். 32 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் 121 பல்நோக்கு தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர இதர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் அடையாளம் காணப்பட்டு அவசர காலத்தில் மக்கள் தங்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதுமான உணவு மற்றும் மருந்து வகைகளும் இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.



Conclusion:மாநில பேரிடர் மீட்புக் குழுவிற்கு நவீன உபகரணங்கள் வாங்க 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.