ETV Bharat / city

குடும்பத்தினர் தற்கொலை முயற்சி: கணவர் கைது!

author img

By

Published : Jun 7, 2021, 10:30 PM IST

திருச்சி அருகே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், கணவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

குடும்பத்தினர் தற்கொலை முயற்சி: கணவர் கைது
குடும்பத்தினர் தற்கொலை முயற்சி: கணவர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு வஉசி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அமரர் ஊர்தி மற்றும் கோயில்களுக்கு தேர் இழுத்து செல்லும் டிரைலர் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார்.

தற்கொலை முயற்சி

இவருக்கு மனைவி சித்ராதேவி (40), தனலட்சுமி (19), திவ்யா (16) என்ற இரண்டு மகள்கள், விக்னேஸ்வரன் (13) என்ற மகன் இருந்தனர். தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். திவ்யா, விக்னேஸ்வரன் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 11 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்தில் கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி அரளி விதையை அரைத்து தான் குடித்தது மட்டுமில்லாமல், பிள்ளைகள் தனலட்சுமி, திவ்யா, விக்னேஷ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் கொடுத்துள்ளார்.

உயிரிழப்பு

இதில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன், திவ்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் தாய் சித்ராதேவி, மகள் தனலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு வஉசி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அமரர் ஊர்தி மற்றும் கோயில்களுக்கு தேர் இழுத்து செல்லும் டிரைலர் வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார்.

தற்கொலை முயற்சி

இவருக்கு மனைவி சித்ராதேவி (40), தனலட்சுமி (19), திவ்யா (16) என்ற இரண்டு மகள்கள், விக்னேஸ்வரன் (13) என்ற மகன் இருந்தனர். தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். திவ்யா, விக்னேஸ்வரன் துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் 11 மற்றும் 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்தில் கடந்த ஒரு வாரமாக கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி அரளி விதையை அரைத்து தான் குடித்தது மட்டுமில்லாமல், பிள்ளைகள் தனலட்சுமி, திவ்யா, விக்னேஷ்வரன் ஆகிய மூன்று பேருக்கும் கொடுத்துள்ளார்.

உயிரிழப்பு

இதில் நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன், திவ்யா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மேலும் தாய் சித்ராதேவி, மகள் தனலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.