திருச்சி: மணப்பாறை அடுத்த மங்களமேடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் பிரகாஷ் (17). அரநிலை பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தநிலையில், நேற்று டிசம்பர் 05 ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் எசனஉடை குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் நீருக்குள் மூழ்கி தத்தளித்துள்ளான்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், உயிரிழந்த நிலையில் சிறுவனை மீட்டனர்.
![பள்ளி மாணவன் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13828300_df.jpg)
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி