ETV Bharat / city

'பார் ஏலம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் செல்வேன்' - Tirupur MLA Gunasekaran says action will be taken against bar bidding officers

திருப்பூர்: பார் ஏலத்தில் முறைகேடு செய்த அலுவலர்கள் குறித்து முதலமைச்சரிடம் முறையிடுவேன் என திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் தெரிவித்துள்ளார்.

tasmac shop bar auction
author img

By

Published : Nov 23, 2019, 12:48 AM IST

திருப்பூர் மாவட்டத்தி உள்ள 236 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்எல்ஏ குணசேகரன், ஏலத்திற்கான பெட்டி வைக்கப்படாமல் முறைகேடாக பெறப்பட்டதாகக் கூறப்பட்ட விண்ணப்பங்களை பார்வையிட்டனர். அதில் முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட 25 விண்ணப்பங்கள் இருந்தது தெரியவந்தது.

மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்,எல்.ஏ குணசேகரன்

இதுகுறித்து ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் அலுவலக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ குணசேகரன் கூறுகையில், ஏலத்தை முறையாக நடத்தாத அலுவலர்கள் குறித்து முதலமைச்சரிடம் முறையிட போவதாகவும், நடவடிக்கை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: பார் உரிமையாளரைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டத்தி உள்ள 236 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், ஏலத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரனிடம் முறையிட்டனர்.

இதையடுத்து, திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்எல்ஏ குணசேகரன், ஏலத்திற்கான பெட்டி வைக்கப்படாமல் முறைகேடாக பெறப்பட்டதாகக் கூறப்பட்ட விண்ணப்பங்களை பார்வையிட்டனர். அதில் முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட 25 விண்ணப்பங்கள் இருந்தது தெரியவந்தது.

மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்,எல்.ஏ குணசேகரன்

இதுகுறித்து ஏலம் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் அலுவலக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ குணசேகரன் கூறுகையில், ஏலத்தை முறையாக நடத்தாத அலுவலர்கள் குறித்து முதலமைச்சரிடம் முறையிட போவதாகவும், நடவடிக்கை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: பார் உரிமையாளரைக் கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Intro:திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார் ஏலம் முறையாக நடத்ததாத அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் முறையிடுவேன் - திருப்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு.Body:திருப்பூர் மாவட்டத்திலுள்ள 236 டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் பார் ஏலத்தில் முறைகேடு நடப்பதாக கூறி டாஸ்மாக் பார்களை ஏலத்தில் எடுக்க வந்த பார் உரிமையாளர்கள் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனிடம் முறையிட்டனர். இதனையடுத்து டாஸ்மாக் பார் ஏலம் நடைபெறும் திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்த எம்எல்ஏ குணசேகரன், ஏலத்திற்கான பெட்டி வைக்கப்படாமல் முறைகேடாக பெறப்பட்டதாக கூறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அலுவலக பீரோவில் இருப்பதாக கூறி, காவல்துறை மூலமாக டாஸ்மாக் ஊழியர் மூலமாக அவற்றை எடுத்து தருமாறு கூறி அவற்றை பார்வையிட்டதில் முறைகேடாக பூர்த்தி செய்யப்பட்ட 25 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக ஊழியரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய எம்எல்ஏ குணசேகரன் ஏலத்தை முறையாக நடத்ததாத அதிகாரிகள் முதல்வரிடம் முறையிட போவதாக தெரிவித்தார். அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து மாவட்ட மேலாளர் லூர்துசாமியை தொடர்பு கொண்ட போது அவர் போனை எடுக்கவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.