திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், "காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றன.
![Bjp meeting vanathi srinivasan வானதி சீனிவாசன் திருப்பூர் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் In consultation with industry professionals Tamil Nadu BJP General Secretary Vanathi Srinivasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4331447_bjp-4.jpg)
காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது ஏன்? அதனால் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் திமுக ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலைப்பாடோடு இருந்த நிலையில் பொதுமக்களிடம் திமுகவிற்கு ஆதரவு இல்லாத காரணத்தால் தற்போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்பதை விரைவில் கட்சியின் தலைமை முடிவு செய்யும், தலைவர் இல்லாத காரணத்தால் பாஜகவின் செயல்பாடுகளில் எந்தவித சுணக்கமும் ஏற்படாமல் பணிகள் தொய்வின்றி நடைபெறும்" எனத் தெரிவித்தார்.