ETV Bharat / city

நள்ளிரவில் வீடு புகுந்து பெண் உள்பட 2 பேர் வெட்டிப்படுகொலை... தூத்துக்குடியில் பயங்கரம்

author img

By

Published : Aug 28, 2022, 2:37 PM IST

தூத்துக்குடி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பெண் உள்பட 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பயங்கரம்
தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள பூதலாபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் பொன்னுசாமி(50). நேற்று(ஆக.27) நள்ளிரவு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அதே பகுதியைச்சேர்ந்தவர் பிச்சையா என்பவரின் மனைவி ராஜா மணி(68) என்பவரும் நேற்று வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருக்கும்போது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், இதனைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நகைக்காக இவர்கள் கொல்லப்பட்டனரா அல்லது தனியாக இருப்பவர்களைக் குறி வைத்து கொல்வது கொலையாளியின் நோக்கமா என்ற கோணத்தில் காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நள்ளிரவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்காக தாத்தாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள பூதலாபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் பொன்னுசாமி(50). நேற்று(ஆக.27) நள்ளிரவு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அதே பகுதியைச்சேர்ந்தவர் பிச்சையா என்பவரின் மனைவி ராஜா மணி(68) என்பவரும் நேற்று வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருக்கும்போது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலை அவ்வழியாகச் சென்ற கிராம மக்கள், இதனைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நகைக்காக இவர்கள் கொல்லப்பட்டனரா அல்லது தனியாக இருப்பவர்களைக் குறி வைத்து கொல்வது கொலையாளியின் நோக்கமா என்ற கோணத்தில் காடல்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நள்ளிரவில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்காக தாத்தாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.