ETV Bharat / city

தூத்துக்குடியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா - எஸ்.பி.ஜெயக்குமார்

author img

By

Published : Jan 30, 2021, 2:29 PM IST

தூத்துக்குடி: மாநகராட்சியின் முக்கிய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமராவை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா
தூத்துக்குடி மாநகராட்சி முக்கிய பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி தென்பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று(ஜன.30) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராவினை விவிடி சந்திப்பில் பொருத்தி உள்ளோம். இது அவ்வழியே செல்லும் அனைத்து வாகனத்தின் எண்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் திறனுடையது. இதன் மூலமாக விவிடி சந்திப்பினை கடந்து செல்லும் எந்த ஒரு வாகனத்தின் பின்புலத்தையும் எளிதில் பெற்றுவிட முடியும்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. தேர்தல் பிரசாரம், கூட்டம் குறித்த அனுமதிக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்ற நடைமுறை தொடரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.

வாகனத்தின் எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமரா
வாகனத்தின் எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமரா

மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை செய்ததற்காக 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனை அதிகம் உள்ள இடங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்

இதையும் படிங்க:தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க நிகழ்ச்சி தென்பாகம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகள், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று(ஜன.30) தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிதாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராவினை விவிடி சந்திப்பில் பொருத்தி உள்ளோம். இது அவ்வழியே செல்லும் அனைத்து வாகனத்தின் எண்களையும் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் திறனுடையது. இதன் மூலமாக விவிடி சந்திப்பினை கடந்து செல்லும் எந்த ஒரு வாகனத்தின் பின்புலத்தையும் எளிதில் பெற்றுவிட முடியும்.

கரோனா ஊரடங்கு விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. தேர்தல் பிரசாரம், கூட்டம் குறித்த அனுமதிக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்ற நடைமுறை தொடரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கைரேகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.

வாகனத்தின் எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமரா
வாகனத்தின் எண்களை பதிவு செய்யும் அதிநவீன கண்காணிப்பு கேமரா

மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனை செய்ததற்காக 10 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனை அதிகம் உள்ள இடங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்

இதையும் படிங்க:தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.