ETV Bharat / city

தூத்துக்குடியில் நர்சிங் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 20, 2022, 7:31 AM IST

தற்கொலை
தற்கொலை

தூத்துக்குடி: சந்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரலிங்கம். இவரது மகள் மீனாட்சி (22).இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் உடன் படிக்கும் ஒரு மாணவியின் செயின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

செயினை மீனாட்சி தான் எடுத்திருக்கலாம் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டதாகவும், இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி, அரசு மருத்துவமனையில் ஆசிட்டை எடுத்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கிய நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (ஜூன்19) பரிதாபமாக உயிரிழந்தார்.

திருட்டு குற்றம் சாட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மீனாட்சியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறப்பு - போலீஸார் விசாரணை

தூத்துக்குடி: சந்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரலிங்கம். இவரது மகள் மீனாட்சி (22).இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் உடன் படிக்கும் ஒரு மாணவியின் செயின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

செயினை மீனாட்சி தான் எடுத்திருக்கலாம் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டதாகவும், இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி, அரசு மருத்துவமனையில் ஆசிட்டை எடுத்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கிய நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (ஜூன்19) பரிதாபமாக உயிரிழந்தார்.

திருட்டு குற்றம் சாட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே மகளின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மீனாட்சியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

இதையும் படிங்க: பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறப்பு - போலீஸார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.