ETV Bharat / city

வாக்கு எண்ணக்கூடாது; 2 ஆண்டுகள் கழித்து மறு தேர்தல் - கிருஷ்ணசாமி

author img

By

Published : Apr 7, 2021, 2:05 PM IST

Updated : Apr 7, 2021, 2:15 PM IST

தூத்துக்குடி: தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

krishnasamy
krishnasamy

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து, மக்களை ஊழல்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக தரப்பில் 500, 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் தேதி வரை என்னை புன்முறுவலோடு வரவேற்ற மக்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பின் முக பாவனையையே மாற்றி விட்டனர். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. பணம் பட்டுவாடா நடந்ததற்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக செயல்பட்டுள்ளது.

எனவே, இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கக்கூடாது. 9 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து, இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணக்கூடாது; 2 ஆண்டுகள் கழித்து மறு தேர்தல் - கிருஷ்ணசாமி

இதையும் படிங்க: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து, மக்களை ஊழல்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக தரப்பில் 500, 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் தேதி வரை என்னை புன்முறுவலோடு வரவேற்ற மக்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பின் முக பாவனையையே மாற்றி விட்டனர். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. பணம் பட்டுவாடா நடந்ததற்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக செயல்பட்டுள்ளது.

எனவே, இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கக்கூடாது. 9 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து, இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணக்கூடாது; 2 ஆண்டுகள் கழித்து மறு தேர்தல் - கிருஷ்ணசாமி

இதையும் படிங்க: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு!

Last Updated : Apr 7, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.